தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான தொடர்களுள் ஒன்றாக வலம் வருவது, மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இல்லத்தரசிகளின் மனங்களில் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. பெண்கள் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் சுற்றி நடக்கும் சம்பவங்களும்தான் இந்த தொடரின் மையக்கரு. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் நீங்கா இடத்தை பிடித்துள்ள மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பல எதிர்பாராத விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முந்தைய எபிசோட்:


மீனாட்சி பொண்ணுங்க தொடரின் முந்தைய எபிசோடில், யமுனா சாந்தாவிடம் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என ஃபீல் செய்ய கார்த்திக் இப்படி பயந்தவனாக இருக்கிறானே என சாந்தா அவனை திட்டுகிறான். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வெளியே கல் கோவிலில் புஷ்பா துர்காவிடம் நீ சங்கிலியை கல்யாணம் செய்து கொள் எனக் கேட்க அவள் முடியாது என்று சொல்கிறாள். 


மேலும் படிக்க | பாலியல் வன்கொடுமை..தொடர் தோல்வி..எல்லாம் கடந்தும் அக்னி சிறகாக பறக்கும் பாவனா..!


புஷ்பா நீ சம்மதம் சொல்லவில்லை என்றால் பஞ்சாயத்தில் உன் அக்கா யமுனாவின் தாலி இறங்கிவிடும் என்று சொல்ல துர்கா யோசிக்கிறாள். அதன் பிறகு சக்தி, யமுனா, சாந்தா மூவரும் பஞ்சாயத்தில் என்ன நடக்குமோ என பேசிக்கொண்டு இருக்க அங்கு வரும் துர்கா இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் முடிவு சங்கிலியை கல்யாணம் செய்வது தான் என சொல்கிறாள்.  மறுபக்கம் புஷ்பா நீதிமணியிடம் பஞ்சாயத்தில் நான் சொல்வதை தான் நீ கேட்க வேண்டும் என்று மிரட்டுகிறாள். பிறகு புஷ்பா பூஜாவிடம் நாளைக்கு பஞ்சாயத்திற்கு சக்தி வரக்கூடாது அது உன் பொறுப்பு என்று சொல்லி அனுப்புகிறாள். நேற்று பரபரப்பாக முடிந்த இந்த சீரியலில் இன்று நடக்கவிருப்பது என்ன தெரியுமா? 



இன்றைய எபிசோட்..


மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய எபிசோடில் சக்தி, யமுனா, சாந்தா என மூவரும் அவர்களது பிரச்சனைகளை பேசிக் கொண்டிருக்க துர்கா பாத்திரம் துலக்க வீட்டின் பின்புறம் செல்கிறாள்.  அப்போது அங்கு வரும் புஷ்பா துர்காவிடம், நீ சங்கிலியை கல்யாணம் செய்துகொண்டால், இந்த எல்லா பிரச்சினையும் தீர்ந்துவிடும், யமுனா கார்த்திக்கை கோகிலாவிடம் சொல்லி நான் சேர்த்து வைக்கிறேன் என்று சொல்ல, முதலில் அதை நிராகரிக்கும் துர்கா பின்பு யோசிக்க ஆரம்பிக்கிறாள்.  இதை தொடர்ந்து பூஜாவை தன் வீட்டிற்கு வர வைக்கும் புஷ்பா, பூஜாவிடம் நாளை நடக்கும் பஞ்சாய்த்துக்கு சக்தி வரக் கூடாது என்கிறாள். கோகிலாவிடம் பேசும் புஷ்பா, நாளை பஞ்சாயத்தில் சங்கிலிக்கும் துர்காவுக்கும் கல்யாணம் நடக்க உதவி கேட்கிறாள்.



காணத்தவறாதீர்கள்..


இப்படியான பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில், அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இந்த தொடரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9:30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | ‘ஆதிபுருஷ் வெளியாகும் தியேட்டர்களில் அனுமனுக்கு ஒரு சீட்’ கேலிக்குள்ளான படக்குழுவின் அறிவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ