Meenakshi Ponnunga: ரங்கநாயகியின் அதிரடி முடிவு-அரிவாளுடன் பூஜா..மீனாட்சி பொண்ணுங்க எபிசாேட் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.  

Written by - Yuvashree | Last Updated : May 15, 2023, 11:32 AM IST
  • தமிழ் சீரியல்களுள் பிரபலமான ஒன்று மீனாட்சி பொண்ணுங்க.
  • இதில் வெற்றியிடம் பேச சக்தி மறுக்கிறாள்.
  • ரங்கநாயகி அதிரடியான முடிவு ஒன்றை எடுக்கிறார்.
Meenakshi Ponnunga: ரங்கநாயகியின் அதிரடி முடிவு-அரிவாளுடன் பூஜா..மீனாட்சி பொண்ணுங்க எபிசாேட் அப்டேட்! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபலமான சீரியல்களுள் முதலிடத்தில் பிடித்திருக்கும் தொடர், மீனாட்சி பொண்ணுங்க. மங்கையர் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் சுற்று நடக்கும் கதைதான் இதன் மையக்கரு. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் இடத்தை பிடித்த மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பல ட்விஸ்டுகளுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.  பரபரப்பான திருப்பங்களுடன் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று நடக்கவுள்ள விஷயங்களை தெரிந்து கொள்வோமா? 

முந்தைய எபிசோட்

தங்கை கர்பமாக இருப்பதற்கு அவளது கணவர்தான் காரணம் என தெரியவர, வெற்றி கல்யாணத்தை நிறுத்திவிட்டு அவர்களை தேடி போய் பிரச்சனை செய்கிறான். இதையடுத்து ஊர் மக்கள் முன்னிலையில் பஞ்சாயத்து கூட்டப்படுகிறது. சக்தியால் தான் பஞ்சாயத்து கூட்டும் அளவிற்கு வந்துவிட்டது என்று ரங்கநாயகி சக்தியை திட்டிவிட்டு பஞ்சாயத்தில் இருந்து வெளியேறுகிறாள்.  இதையடுத்து வீட்டுக்கு சென்று செல்வமுருகனிடம் சரண்யாவிற்கு டி என் ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று, அசோக் அம்மா சொன்னதாக சொல்கிறாள். 

Meenakshi Ponnunga

அசோக் இங்கே வந்து போனதை நானே பார்த்திருக்கிறேன் என்று சொல்வமுருகன் கூறுகிறார். இதனால் கோவம் அடைந்த ரங்கநாயகி துப்பாக்கி எடுத்து வந்து சக்தியின் நெற்றியில் வைக்க அதை வெற்றி தடுத்து காப்பாற்ற, அந்த நேரத்தில் பூஜா கையில் தாலியுடன் கோபமாக வாசலில் வந்து நிற்கிறாள். இப்படி ட்விஸ்டுடன் முடிக்கப்பட்ட தொடர் இன்று எப்படி பயணிக்க உள்ளது? இன்றைய எபிசோடை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: ஆல்பம் ஃபோட்டோவில் காத்திருந்த அதிர்ச்சி, சீதாவுக்கு சவால்!!

இன்றைய எபிசோட் 

மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய எபிசோடில், பூஜாவை ரங்கநாயகி இங்கிருந்து போய் விடு என்று சொல்ல பூஜா தோட்டத்திலிருந்து அரிவாள் எடுத்து வந்து தன் கழுத்தில் வைத்துக் கொண்டு இங்கிருந்து என்னை போக சொன்னால் நான் வெட்டிக் கொள்வேன் என நாடகமாடுகிறாள்.

இதனால் மனசு மாறிய ரங்கநாயகி பூஜா இங்கே இருக்கட்டும் என்று விட்டு விடுகிறாள். அனைவரும் சென்று விட பூஜா சக்தியிடம் இங்கிருந்து என்னை யாரும் வெளியே அனுப்ப முடியாது என்று சவால் விட்டு செல்கிறாள்.

Meenakshi Ponnunga

பேச மறுக்கும் சக்தி

மாடியில் தனியாக இருக்கும் வெற்றியிடம் சக்தி சென்று பேச வெற்றி பேச மறுக்கிறான். மறுநாள் காலையில் சக்தி எழுந்து வீட்டிற்கு சாம்பிராணி போட அங்கு வந்த வெற்றி நீ வீட்டை விட்டு வெளியே போ என்று கோபமாக சொல்ல, சக்தி தனக்கு நிறைய வேலைகள் இருப்பதாக சொல்லி அங்கிருந்து கிளம்ப வெற்றி அவளை இறுக்கமாக பிடித்துக் கொள்கிறான். 

இதை பார்த்த அனைவரும் சென்று விட அவன் பிடியிலிருந்து விலகிய சக்தி இன்று இரவு நமக்கு முதலிரவு ரெடியாக இரு என்று சொல்ல, வெற்றி இதற்கெல்லாம் நான் மசிய மாட்டேன் என்று கோபமாக கூறுகிறான். 

காணத்தவறாதீர்கள்

இப்படி பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில்  அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியை இரவு 9:30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Adah Sharma: விபத்தில் சிக்கிய கேரளா ஸ்டோரி நாயகி..போராட்டக்காரர்களின் சதியா? ரசிகர்கள் கேள்வி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News