மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான தொடர்களுள் ஒன்றாக விளங்குவது, மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்களின் மனங்களில் மிகவும் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. மங்கையர் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கரு. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் நீங்கா இடத்தை பிடித்துள்ள மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பல எதிர்பாராத விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுவரை நடந்தவை..


சக்தி சீப் டாக்டரை சென்று சந்திக்கிறாள். அவரும் நர்சை கூப்பிட்டு கன்ஃபார்ம் செய்து விட்டு, ரிப்போர்ட் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று கூறி சக்தியை வெளியே அனுப்புகிறார். இதற்கிடையில் சரண்யா சக்திக்கு போன் செய்து ஆதாரத்துடன் வரவில்லை என்றால் என்னை மறந்துவிடு என்று கூற, சக்தி வெளியே இருக்கும் வெற்றியிடம் சொல்ல வெற்றி டாக்டர் அறைக்குள் வந்து , கதவை மூடிவிட்டு டாக்டரை அடிக்கிறான்.


மேலும் படிக்க | தாலியுடன் ஷாக் கொடுத்த பரணி! அண்ணா சீரியலில் சௌந்தர பாண்டி வைத்த செக்மேட்


இதனால் டாக்டர் ரிப்போர்ட்டை செக் பண்ண, அதில் அசோக் தான் அப்பா என இருப்பது தெரிய வருகிறது. ரங்க நாயகியும் பூஜாவும், நேரம் ஆறு மணி நெருங்கி விட்டதால் சக்தி வர மாட்டாள் என்று நினைக்க, சக்தி நர்ஸ் உடன் ரங்க நாயகியின் வீட்டிற்கு வருகிறாள். நர்ஸ் ரிப்போர்ட் மாற்றி விட்டதை தெரிவிக்க, சக்தி பூஜாவும் நர்ஸ்சும் பேசும் காட்சியை காட்ட, பூஜா அதிர்ச்சி அடைகிறாள். 


இன்றைய எபிசோட்..


இன்றைய எபிசோடில் சக்தி வீட்டிற்கு அழைத்து வந்த நர்சை விசாரிக்க  ரிப்போர்ட் தவறாக மாறிவிட்டது என்றும் பூஜா என்னுடைய தோழி எனவே எதார்ச்சையாக தான் சந்தித்தோம் அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்கிறாள்.


அதனை தொடர்ந்து ரங்கநாயகி சகுந்தலாவை எச்சரித்து சரண்யாவின் வயிற்றில் வளர்வது அசோக்கின் குழந்தை தான் என்று கூறி ,சரண்யாவை அனுப்ப மறுக்கிறாள். ஆனால் சரண்யா அசோக்குடன் சென்று விடுகிறாள். அதன் பிறகு சக்தி பூஜாவை சந்தித்து உனக்கு கல்யாணம் செய்து வைத்து இந்த வீட்டை விட்டு வெளியேற்றுவேன் என்று சபதம் போடுகிறாள். 


இதனை தொடர்ந்து சகுந்தலாவின் வீட்டிற்கு  சென்ற வெற்றி சகுந்தலாவை குச்சியால் அடித்து எச்சரிக்கிறான். அடுத்ததாக கோவிலில் கொடியேற்று விழா நடத்துகிறார்கள். முதல் மரியாதை பரிவட்டம் நீதிமணி மனைவி மீனாட்சிக்கு தான் தர வேண்டும் என்று ஊர்க்காரர்கள் பேச ,அப்போது அங்கே வந்த புஷ்பா நானும் நீதிமணி மனைவி தான் என்று என்று சொல்லி எனக்குத் தான் பரிவட்டம் கட்ட வேண்டும் என்று பிரச்சனை செய்கிறாள்.


மேலும் படிக்க | டிராமா போடும் முத்துப்பாண்டி.. கண்ணீருடன் சண்முகத்துக்கு அதிர்ச்சி கொடுத்த பரணி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ