ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் மிகவும் பிரபலமான சீரியல்களுள் ஒன்றாக வலம் வருவது, மீனாட்சி பொண்ணுங்க தொடர்தான். இந்த தொடருக்கு, மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இல்லத்தரசிகளின் மனங்களில் பிடித்துள்ள மீனாட்சி பொண்ணுங்க தொடர், பெண்கள் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் சுற்றி நடக்கும் சம்பவங்களின் அடிப்படையாகக் கொண்டது என்பதால், அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படுகிறது.


தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் நீங்கா இடத்தை பிடித்துள்ள மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பல எதிர்பாராத விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா?


தொலைக்காட்சிகளில் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை அர்ச்சனா  மாற்றப்பட்டுள்ளார்.


 


முந்தைய எபிசோட்:


பூட்டிய அறையில் இருந்த சக்தி, ஒரு வழியாக தப்பித்து  வேகமாக பஞ்சாயத்து நடக்கும் இடத்தை நோக்கி ஓடி வருகிறாள். அவளது ரியாக்ஷன் என்ன?  மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9:30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.


இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் யமுனாவின் தாலியை கழற்றி பால் சொம்பில் போட சொன்ன தீர்ப்பை சக்தி ஏற்க மறுக்கிறாள். யமுனாவும் தாலியை கழற்ற மறுக்கிறாள்.


மேலும் படிக்க | நயன் - விக்கியை துரத்திய நான்கு பிரச்சனைகள்! சோதனை காலம் என பதிவிட்ட விக்கி


அதேபோல் புஷ்பாவிடம் பத்திரத்தில் கையெழுத்து போட்டு மீனாட்சி பணம் வாங்கி இருப்பதால் வீடு புஷ்பாவுக்கு தான் சொந்தம் என்றும் பஞ்சாயத்து காரர்கள் சொல்ல, என்ன செய்வது என தெரியாமல் சக்தி தடுமாற்றத்தில் இருக்க,  அங்கே வந்து நின்ற வெற்றியிடம் என்ன செய்வது என சக்தி கேட்கிறாள். 



இதற்கெல்லாம் பதில் நம்பர் ஒன் வந்திருக்கிறார்கள் என வெற்றி கூற, காரில் இருந்து மீனாட்சி இறங்கி வர அனைவரும் அதிர்ச்சியாகிறார்கள். 


மேலும் படிக்க | என்னாலே கோபமா? சொல்லாமல் போயிட்டீங்களே? சௌந்தரபாண்டியின் நக்கலுக்கு பதிலடி


துர்கா, யமுனா, சக்தி, சாந்தா அனைவரும் சென்று மீனாட்சியை சந்தோஷமாக வரவேற்க நான் சில காலம் ஒரு இடத்தில் இருந்தேன் அதைப்பற்றி பிறகு கூறுகிறேன் என சொல்லிவிட்டு, பஞ்சாயத்தில் வந்து துர்காவுக்கு தாலி கட்ட தயாராக இருந்த சங்கிலியை அறைகிறாள்.


பிறகு புஷ்பாவிடம் நான் கடன் வாங்கியது உண்மைதான் ஆனால் அதை திருப்பிக் கொடுத்து விடுவேன் அதற்காக சங்கிலிக்கு என் மகளை கல்யாணம் செய்து வைக்க முடியாது என்று கூறுகிறாள்.


மேலும் கார்த்திக்கிடமும் கோகிலாவிடமும் சென்று யமுனாவை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுங்கள் அவள் மீனாட்சி மகளாகவே இருக்கட்டும், எப்போது யமுனா நீங்க தாலி கட்டிய மனைவி என்று உணரும் தைரியம் வருகிறதோ அப்போது வந்து என்னிடம் பேசுங்கள் என்று சொல்கிறாள்.


அடுத்ததாக நடக்க போவது என்ன என்பதை, இன்று இரவு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | திருப்பதி கோயிலில் பிரபல நடிகைக்கு முத்தம் கொடுத்த ‘ஆதிபுருஷ்’ இயக்குநர்..வைரல் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ