சதி செய்யும் பூஜா-வார்னிங் கொடுத்த ரங்கநாயகி..மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் அப்டேட்..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த தொடரின் இன்றைய அப்டேட் என்ன தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : May 29, 2023, 11:49 AM IST
  • வெற்றி கைதாகிறான்.
  • அவனை வெளிகொண்டு வர முயற்சிகள் நடைபெறுகிறது.
  • சக்த்திக்கு எதிராக பூஜா சதி செய்கிறாள்.
சதி செய்யும் பூஜா-வார்னிங் கொடுத்த ரங்கநாயகி..மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் அப்டேட்..! title=

தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான தொடர்களுள் ஒன்றாக விளங்குவது மீனாட்சி பொண்ணுங்க. மக்களின் மனங்களில் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. மங்கைகள் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கரு. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் நீங்கா இடத்தை பிடித்துள்ள மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பல எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று நடக்கவுள்ள விஷயங்கள் என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். 

இதுவரை நடந்த சம்பவங்கள்..

புஷ்பாவும் சங்கிலியும் இன்ஸ்பெக்டரை சந்தித்து வெற்றி மீது கம்ப்ளைன்ட் கொடுத்ததோடு லஞ்சம் கொடுத்து அவனை கைது செய்ய கூறுகிறர்கள். இன்ஸ்பெக்டர் வெற்றியை கைது செய்ய முடிவெடுக்கிறார். வெற்றி, திடியன், கிரியும் போலீஸ் ஸ்டேஷனில் இருக்க, சக்தி எப்படியும் வந்து தன்னை காப்பாற்ற வருவாள் என்று வெற்றி சொல்லிக் கொண்டிருக்கும்போது சக்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறாள். இன்ஸ்பெக்டரிடம். ஐ பி சி செக்சன் எல்லாம் கேட்டு விசாரிக்கிறாள். பின் செக்ஷன் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று சொல்லுகிறாள் .தன்னை வெளியில் எடுத்து விடுவாள் என நினைத்த வெற்றி கடுப்பாகிறான். 

Meenakshi Ponnunga

மேலும் படிக்க | கவர்ச்சிக்கன்னி! கதாநாயகி! அன்பான அம்மாக்கள்... நாயகிகளின் அழகிய வாழ்க்கை பரிமாற்றம்

சக்தி வெற்றிடம் உனக்கு ஒரு மானப் பிரச்சனை என்றால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன் என்று கூறி அவள் கொண்டு வந்த வேட்டி சட்டையை கொடுக்கிறாள், கர்சிப்பை கீழே போடுகிறேன் எடுப்பது போல் என் காலில் விழுந்து மன்னிப்பு கேள் என்று சக்தி சொல்ல வெற்றி மன்னிப்பு கேட்க மறுக்கிறான். அடுத்து நடந்தது என்ன? வெற்றி ஜெயிலில் இருந்து வெளியேறினானா? இன்றைய எபிசோடில் தெரிந்து கொள்ளலாம் வாங்க..

Meenakshi Ponnunga

இன்றைய சம்பவங்கள் இவைதான்..

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோடில் பூஜா அடியாட்களிடம் கோர்ட்டுக்கு வரும் அசோக்கை மறித்து அவனைக் கடத்த சொல்கிறாள்‌. அதே போல் அடியாட்கள் அசோக்கை கடத்தி வைக்கிறார்கள்.  அதன் பிறகு கோர்ட் ஆரம்பித்து ஜட்ஜ் வந்துவிட டென்ஷனான ரங்கநாயகி வெளியே வந்து சக்தியிடம் இன்னும் ஏன் தாமதம் எனக் கேட்கிறாள்.  உடனே பூஜா ரங்க நாயகியிடம் இவள் அசோக் உடன் சேர்ந்து திட்டமிட்டு வெற்றியை உள்ளே வைத்திருக்கிறாள் என்று சொல்ல ரங்கநாயகி இன்னும் கொஞ்ச நேரத்தில் வெற்றி வெளியே வந்தாக வேண்டும் என எச்சரிக்கிறாள். 

Meenakshi Ponnunga

அசோக் வராததால் சக்தி என்ன செய்வது என்று தெரியாமல் யோசிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பதை இன்றைய எபிசோடில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..

காணத்தவறாதீர்கள்..

வெற்றி வெளியேறுவானா? பூஜாவின் சதி பலிக்குமா? சக்தி பிரச்சனையில் இருந்து  தப்பித்தாளா? போன்ற பல கேள்விகளுக்கு விடை இன்றை எபிசாேடில்தான் உள்ளது. அதை தெரிந்து கொள்ள, இன்று இரவு 9:30 மணிக்கு மீனாட்சி பொண்ணுங்க தொடரை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். 

மேலும் படிக்க | வெற்றியை கைது செய்த போலீஸ்.. மீனாட்சி பொண்ணுங்க தொடரில் அதிரடி திருப்பம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News