ஜெகதீஷ் உயிரை பறிக்க வந்த எமன் - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!

Mari Zee Tamil mega serial update: ஜெகதீஷ் உயிரை பறிக்க வந்த எமன்.. மாரியால் காத்திருந்த ட்விஸ்ட்! பரபரப்பான திருப்பங்களுடன் மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - RK Spark | Last Updated : Jun 7, 2023, 12:52 PM IST
  • கண்ணீரோட அமங்கலியா சுத்துறத நான் பாக்கணும்
  • போட்டோவில் தொங்கும் தாலியை அறுத்து எறிகிறாள்.
  • மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
ஜெகதீஷ் உயிரை பறிக்க வந்த எமன் - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஜெகதீஷ் மாரடைப்பால் மயங்கி கீழே விழ தாரா மாத்திரையை கொடுக்காமல் தவிக்க விட்ட நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது தாரா என்னையா இந்த வீட்டை விட்டு வெளியே போக சொன்னீங்க, நீங்க ஒரே அடியா மேல போய் சேருங்க, தேவி செத்து போன பிறகும் நகையெல்லாம் போட்டுட்டு சந்தோசமா சுத்திகிட்டு இருக்கா, அவ கண்ணீரோட அமங்கலியா சுத்துறத நான் பாக்கணும் என பேசிக் கொண்டிருக்க இந்த நேரம் பார்த்து மாரியும் சூரியாவும் வீட்டுக்கு வந்து விடுகின்றனர். 

maarim

மேலும் படிக்க | காலா பட க்ளைமேக்ஸில் ரஜினி இறந்தாரா இல்லையா? 5 ஆண்டுகளாகியும் அவிழ்க்க முடியாத மர்மம்..!

இதையறிந்த தாரா அப்படியே நல்லவள் போல நாடகம் போட்டு ஜெகதீசை எழுப்புவது போல நடிக்க சூரியாவும் மாரியும் அவரை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கின்றனர். டாக்டர் அவருக்கு பெரிய ஹார்ட் அட்டாக் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மறுபக்கம் வீட்டில் தாரா தேவி போட்டோ முன்பு நின்று உன் புருஷனையும் மேல அனுப்பி வைக்கிறேன், சந்தோசமாக டூயட் பாருங்க என்று சொல்லி தேவி போட்டோவில் தொங்கும் தாலியை அறுத்து எறிகிறாள். இங்கே ஹாஸ்பிடலில் மாரி அழுதபடி இருக்க ஹாசினி மாமா நல்லபடியா திரும்பி வருவாரு என்று ஆறுதல் சொல்ல அதன் பிறகு மாரி பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் சிலை அருகே சென்று வேண்டி கொண்டு ஜெகதீசை சந்தித்து நெற்றியில் விபூதி வைத்து விட அப்போது அங்கு தோன்றும் தேவியம்மா அவர் பிழைக்க மாட்டாரு, நான் அமங்கலியாக ஆக போறேன், என் பூவும் பொட்டும் பறிபோக போகிறது என அழுது துடிக்கிறாள். 

அந்த சமயம் பார்த்து மேலே இருந்து ஏதோ ஒரு ஒளி கீழே இறங்க தேவி அது தான் எமன் என்று சொல்ல தேவியின் குங்குமமும் கொஞ்சம் கொஞ்சமாக கலைய தொடங்க உடனே மாரி தனது கையை அறுத்து கொள்ள அந்த ரத்தம் தேவியம்மா நெற்றியில் பட்டு பொட்டாக மாறுகிறது. உடனே கீழே இறங்கிய ஒளி மீண்டும் மேலே சென்று காணாமல் போகிறது. தேவி தாலி காப்பாற்ற பட்டதால் சந்தோசம் அடைகிறாள். அடுத்து ஓரிரு நாட்கள் கழித்து ஜெகதீஷ் கண் விழித்து மாரியை பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். மாரி வந்ததும் இனிமே இந்த குடும்பத்தை நீ தான் பார்த்துக்கணும் என்று சொல்ல அந்த நேரம் சங்கரபாண்டி மற்றும் தாரா ஹாஸ்பிடலில் நுழைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Lust Stories 2: புது பட டீசரில் படு கவர்ச்சி காட்டிய தமன்னா..செம ஷாக்கில் ரசிகர்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News