பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘அவெஞ்சர்ஸ்; எண்ட் கேம்’ திரைப்படத்திற்கு தமிழில் வசனம் எழுதுகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டு ஏப்ரல் 26-ஆம் நாள் வெளியாகவுள்ள ஹாலிவுட் படமான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ படத்துக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் வசனம் எழுத ஒப்ந்தம் ஆகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 


கடந்த ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. 


இந்தியாவிலும் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகி வசூலில் பெரும் சாதனை படைத்தது. இந்நிலையில் அவெஞ்சர்ஸ் படவரிசையில் 4-வது பாகமான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ இந்த ஆண்டு வெளியாகும் என படக்குழவினர் அறிவித்திருந்தனர்.


இந்த வகையில் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 26-ஆம் நாள் இந்தியாவில் வெளியாகவுள்ளது. ஹாலிவுட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்துக்கு தமிழில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதுகிறார். 


டிஸ்னி இந்தியா நிறுவனம் இந்த அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதுகுறித்து முருகதாஸ் அவர்கள் தெரிவிக்கையில்... “எப்போதும் மார்வெல் படங்களை ஆச்சர்யத்துடன் ரசித்து பார்ப்பேன்.‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ படத்தை நாடே ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஒரு மார்வெல் ரசிகனாக அயர்ன்மேன், தோர், கேப்டன் அமெரிக்கா போன்ற சூப்பர்ஹீரோக்களை ஒன்றிணைக்கும் ஒரு படத்தின் அங்கமாக இருப்பது மகழ்ச்சியை தருகிறது. என் மகன் ஆதித்யாவுக்கு நன்றி. படத்தில் தமிழுக்கு ஏற்றார்போல் சில விஷயங்களை சேர்த்துள்ளேன்.” என குறிப்பிட்டுள்ளார்.