நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அது மட்டுமன்றி, உலகளில் வசூலிலும் பட்டைய கிளப்பி வருகிறது. ஜெயிலர் படம் உலகளவில் ஒரே வாரத்தில் 375 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நடிகர் ரஜினி தனது 170வது படத்தில் நடிக்க இருக்கிறார். ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கி பிரபலமான டி.ஜே ஞானவேல் ரஜினியின் 170வது படத்தை இயக்குகிறார். இதற்கான ஸ்கிரீன் டெஸ்டிங் பணிகள் சில தினங்களுக்கு முன்பு நடைப்பெற்றன. இந்த படத்தினை லைகா நிறுவனம் தாயரித்து வழங்க உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிக்க மறுத்த நடிகர்..? 


‘தலைவர் 170’ படத்தில் நடிக்க இருப்பதாக பலரது நடிகர்களின் பெயர் அடிப்பட்டு வருகின்றன. படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடிக்க ஒரு தெலுங்கு நடிகரை படக்குழு நாடியதாக கூறப்படுகிறது. ராஜமெளலி இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான நான் ஈ (ஈகா) பட நாயகன் நானியை ரஜினியின் 170வது படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்ததாம். ஆனால், அவர் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஹீரோவாகவே தொடர்ந்து நடித்து வரும் நானிக்கு, ரஜினியின் படத்தில் நெகடிவ் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க கேட்டதாகவும், அது தனக்கு செட் ஆகாது என்பதால் அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க நானி மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த வாய்ப்பு வேறு ஒரு நடிகரின் கைகளுக்கு சென்றுள்ளது. 


மேலும் படிக்க | சைகையிலேயே கலக்கிய கமல்... வந்தது பிக்பாஸ் சீசன் 7 வீடியோ - இதோ முழு விவரம்!



‘அவருக்கு’ பதில் ‘இவர்’


நானிக்கு பதிலாக, பிரபல தெலுங்கு நடிகர் சர்வாணந்த், அவரது கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இவர், ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். கடந்த ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான ‘கணம்’ படத்தில் நடித்திருந்தார். இவருக்கு தென்னிந்தியா அளவில் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.


தலைவர் 170: 


ரஜினியின் 170வது படத்திற்கு இன்னும் பெயிர் சூட்டப்படவில்லை. இதை படக்குழுவினரும் ரசிகர்களும் ‘தலைவர் 170’ என்றே குறிப்பிட்டு வருகின்றனர். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதில் இருந்து, ‘இந்த’ டை்டில்தான் படத்திற்கு வைக்கப்படும் என ஒரு தகவல் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு ‘வேட்டையன்’ என்று டைட்டில் வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான ‘சந்திரமுகி’ படத்தில் ‘வேட்டையன்’ ராஜா கதாப்பாத்திரம் இடம் பெற்றிருக்கும். அந்த வேட்டையன் ராஜாவாக ரஜினியே நடித்திருப்பார். இதனால், செண்டிமன்டாக அவரது 170வது படத்திற்கு இந்த தலைப்பு வைக்கப்பட்டிருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ‘வேட்டையன்’ என்பதுதான் அந்த படத்தின் டைட்டில் என கிட்டத்தட்ட சினிமா வட்டாரங்களில் இருந்தும் உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனாலும், படக்குழு தரப்பில் இருந்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


அடுத்த மாதம் படப்பிடிப்பு…


ரஜினியின் 170வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தின் ரிலீஸிற்கு முன்னதாக இமயமலைக்கு சென்ற ரஜினிகாந்த், ரிஷிகேஷ் உள்ளிட்ட சில முக்கிய ஆன்மீக தலங்களுக்கு பயணம் மேற்கொண்டார். இவர், ‘லால் சலாம்’ படத்திலும் ‘மொய்தீன் பாய்’ எனும் கதாப்பாத்திரத்தில் கேமியோ ராேலில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இதனை, ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். 


மேலும் படிக்க | ‘தலைவர் 170’ டைட்டில் இதுதான்..! கசிந்தது ருசிகர அப்டேட்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ