மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியான படம், பொன்னியின செல்வன் 2. கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் வெளியானது. இதில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கும் ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பலர் இதில் நடித்திருந்தனர். இந்த படம் ஓடிடியில் தற்போது வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓடிடி ரிலீஸ்..


ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மாதம் வெளியான பொன்னியின் செல்வன் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பைத்தான் பெற்றது. ஆனால், சில வாரங்களிலேயே படத்தை பார்க்க தியேட்டருக்கு வரும் கூட்டம் குறைய தொடங்கின. இதையடுத்து, பொன்னியின் செல்வன் 2 படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டது. இதையடுத்து சமீபத்தில் அமேசான் ப்ரைம் தளத்தில் 399ரூபாய் சந்தா செலுத்தி பார்க்கும் வகையில் இப்படம் வெளியாகியுள்ளது. ஜூன் 28ஆம் தேதியிலிருந்து சந்தா செலுத்தாமல் பார்க்கும் வசதியுடன் பொன்னியின் செல்வன் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | பைக் ஓட்டி பழகும் சின்னத்திரை நயன்தாரா..வாணி போஜனின் சாகச பயண க்ளிக்ஸ்!


பொன்னியின் செல்வன் 2:


கிட்டத்தட்ட 2 வருடங்களாக இருந்த பொன்னியின் செல்வன் படத்தின் பணிகள் ஒருவழியாக முடிக்கப்பட்டு இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டன. இரண்டு படத்தின் படப்பிடிப்புகளையும் 100 நாட்களுக்கும் மணிரத்னம் முடித்ததாக பேசப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படத்தை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடினர். படத்தின் இசை வெளியீட்டு விழா, ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் என தடபுடலாக நடைப்பெற்றன. இந்த படம், தமிழ் சினிமாவிற்கே மிகப்பெரிய திருப்பு முனையாக பார்க்ப்பட்டது. ஆனால் இரண்டாம் பாகத்திற்கான ப்ரமோஷன் பணிகள் கொஞ்சம் மந்தமாகவே இருந்தது. முதல் படத்திற்கு இருந்த அளவிற்கான வரவேற்புகள் இந்த பாகத்திற்கு கிடைக்கவில்லை.


ஐஸ்வர்யா அபாரம்…!


முதல் பாகத்தில் நெகடிவ் கதாப்பாத்திரமாக காண்பிக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய், இந்த பாகத்தில் படம் முழுவதும் ஸ்கோர் செய்தார். நந்தினி-ஆதித்த கரிகாலனின் காதல் கதையும் ‘சின்னஞ்சிறு நிலவே..’ பாடல் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. மேலும் ஐஸ்வர்யா ராய்தான் நந்தினி கதாப்பாத்திரத்தில் நடிக்க பொருத்தமானவர் என்ற கூற்றும் இணையத்தில் வட்டமடித்தது. முதல் பாகத்தில் புகழப்பட்ட ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயம் ரவி, த்ரிஷாவின் நடிப்பு இந்த பாகத்தில் ஐஸ்வர்யா ராய்யிற்கு முன்பு காணாமல் போயின. 


300 கோடி வசூல்..?


பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் தற்போதுவரை இப்படம் 300 கோடி வரை கலெகட் செய்துள்ளது. இந்த படத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட சில உலக நாடுகளில் நல்ல வரவேற்பும் இருந்தது. பொன்னியின் செல்வன் படத்தை அடுத்து பல படங்கள் வெளியானது இந்த படத்தின் வசூலை பாதித்திருக்கும் என சிலர் கருதுகின்றனர். 


முதல் பாகத்தின் மெகா வசூல்..


பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் நீண்ட நாட்கள் திரையரங்கில் ஓடியது மட்டுமல்லாது சுமார் 500 கோடி வரை வசூல் செய்தது. இந்த சாதனையை இதன் இரண்டாம் பாகம் முறியடிக்காதது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. புத்தகம் படித்த சில ரசிகர்களே இப்படம் நன்றாக உள்ளதாக தெரிவித்திருந்தனர். இரண்டாம் பாகத்திற்கும் நல்ல வகையான விமர்சனங்களே வந்து கொண்டிருந்தன. இருப்பினும் படம், அதற்குள் ரூல்ட்-அவுட் ஆகியது படத்தின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.


மேலும் படிக்க | வெள்ளி நிலவாக வெள்ளை நிற உடையில் ‘இந்தியன் 2’ பட நாயகி ரகுல் ப்ரீத் சிங்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ