சமீப காலங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள படமாக இருப்பது பொன்னியின் செல்வன். வரலாற்று படமாக உருவாகி வரும் இப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கல்கியின் பகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய இயக்குனர்களின் ஒருவரான மணிரத்னம் இந்த படத்தை இயக்கி வருகிறார். 


லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. 


இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. 


மேலும் படிக்க | மணிரத்னத்துக்கு போட்டியாக மற்றொரு பொன்னியின் செல்வன்! 


சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையாக “பொன்னியின் செல்வன்” இருக்கும். இது அனைவரும் அறிந்ததே. 


இதைத் திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக்  கொண்டிருக்கிறார்கள். சோழப் பேரரசின் பொற்காலம் துவங்கும் இந்தக் கால கட்டத்தைத்  திரைக்குக் கொண்டு வர ஆயிரக்கணக்கான கலைஞர்கள் உழைத்து வருகின்றனர்.



ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளம் பொன்னியின் செல்வன் படத்தில் இருக்கிறது. பல பெரிய நடிகர்களை ஒரே படத்தில் காணும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே மிகவும் அதிகமாக உள்ளது.



மேலும் படிக்க | இந்தியாவின் முதல் ஆஸ்ட்ரோ-திரில்லர் படமாக வெளிவரும் ராதே சியாம்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR