Premam Malar Teacher First Choice : பல தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, மலையாள சினிமாக்களையும் பிடிக்கும். இது மஞ்சுமெல் பாய்ஸ் படம் வந்த பிறகு வந்த மாற்றம் அல்ல. கோலிவுட் ரசிகர்கள் பலர் பல ஆண்டுகளாகவே மலையாள சினிமாக்களை ரசித்து வருகின்றன. ஆனால் மொழியைத் தாண்டி பலரது இதயம் தொட்ட மலையாள படங்களில் ஒன்று பிரேமம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரேமம் திரைப்படம்: 


அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம். டிபன் பாலி ஹீரோவாக நடித்திருந்த இந்த படம் தான் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் அதிகம் வசூல் பெற்ற முதல் மலையாள படமாக இருந்தது. வெறும் நான்கு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், உலகளவில் பெரும் வெற்றி பெற்ற 74.5 கோடிகளை பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ஆகப்பெற்றது. கேரளா மற்றும் தமிழகத்தில் இப்படம் 300 நாட்கள் வரை தியேட்டரில் ஓடியது. 


இப்படம் வெளியான போது யாருக்கும் அது எவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்பது தெரியாது. தமிழில் வெளியான நேரம் படம் மூலம் அறிமுகமான அல்போன்ஸ் புத்திரனின் இரண்டாவது படம் பிரேமம். இருப்பினும் ஒரு புது இயக்குனரின் படம் என்பது தெரியாத அளவிற்கு திரை கதையும், கதையின் சூழலும் நேர்த்தியாக இருந்தது. இளைஞர்கள் மட்டுமின்றி பல்வேறு வயது தரப்பினரையும் கவர்ந்த படம் இது. 


காதல் கதை..


காதலில் ராசி இல்லாத ஜார்ஜ் டேவிட் என்ற இளைஞன் பல்வேறு காலகட்டத்தில் மூன்று பெண்களை காதலிக்கிறான். இந்த சிம்பிளான ஒரு வரி கதையை தான் இரண்டரை மணி நேர படமாக எடுத்திருப்பர். அனைத்து இளைஞர்களின் மனதை புரிந்து கொள்ளும் வகையில் இருந்த இந்த படம் மொழிகளை தாண்டி வெற்றி பெற இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. 


மேலும் படிக்க | வாரிசு முதல் வலிமை வரை! சாய் பல்லவி நிராகரித்த படங்கள்!


பலருக்கு முதல் படம்..


பிரேமம் திரைப்படம், இப்போது முன்னணி ஹீரோயின்களாக இருக்கும் பல நாயகிகளுக்கு முதல் படமாக அமைந்திருந்தது. தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், இங்கு அதிகளவு ரசிகர்கள் கூட்டத்தை பெற்றிருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். இவர், பிரேமம் படத்தில் மேரி ஜார்ஜ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அதே போல, லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்த மடோனா சபாஸ்டியனின் இந்த படத்தில் முதன் முதலாக அறிமுகமானார்.  தற்போது பான் இந்திய நடிகையாக வளர்ந்திருக்கும் சாய் பல்லவி, பிரேமம் படத்தின் மூலமாகத்தான் முதன் முதலாக அறிமுகமானார். இவர் நடித்திருந்த கதாப்பாத்திரம் ‘மலர் டீச்சர்’. இந்த கதாப்பாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா? 



மலர் டீச்சராக நடிக்க இருந்தவர்..


மலர் டீச்சர் கதாப்பாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர், அசின்தான் என்ற தகவலை இயக்குநர் அல்பாேன்ஸ் புத்திரன் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். முதலில் மலர் டீச்சரை மலையாளியாகத்தான் காண்பிக்க இருந்ததாகவும், அதற்கு அசினைத்தான் நடிக்க வைக்க இருந்ததாகவும் கூறியிருக்கிறார். அதன் பின்னர் அப்பெண் தமிழ் பெண்ணாக மாறியதால் சாய் பல்லவியை நடிக்க வைத்ததாக கூறினார். 


மேலும் படிக்க | நடிகை சாய் பல்லவி 10 வருடங்களாக காதலிக்கும் நபர்! யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ