இதுதான் பிரியங்காவின் மகள்!! நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் மற்றும் அவரது கணவர் நிக் ஜோனாஸ் ஆகியோர் தங்கள் மகளை அதிகாரப்பூர்வமாக உலகுக்கு அறிமுகப்படுத்தினர். பிரியங்காவின் மகளுக்கு ஒரு வயது ஆகி சில நாட்கள் ஆகியுள்ள நிலையில், அவர் முதல் முறையாக தனது மகள் மால்தி மேரியின் முகத்தை ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் வெளிப்படுத்தினார். பிரியங்காவின் மகள் பிறந்ததுமுதலே, அவரது முகத்தை காண பிரியங்காவின் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் இருந்தனர். இந்த நிலையில், தற்போது குழந்தையின் முகத்தை பிரியங்கா வெளிக்காட்டியுள்ள நிலையில், குழந்தையின் அழகையும் கியூட்னசையும் பற்றி நெட்டிசன்கள் சிலாகித்து வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இசைக்கலைஞர் நிக் ஜோனாஸ் மற்றும் அவரது சகோதரர்கள் கெவின் மற்றும் ஜோ ஆகியோர் கலந்துகொண்ட ஜோனாஸ் பிரதர்ஸ் வாக் ஆஃப் ஃபேம் விழாவில் தனது செல்ல மகளின் முகத்தை வெளி உலகுக்கு காட்டினார் பிரியங்கா. கெவின் மற்றும் ஜோவின் மனைவிகள், டேனியல் ஜோனாஸ் மற்றும் சோஃபி டர்னர் ஆகியோரும் ஒரு குடும்ப குழு படத்திற்கு போஸ் கொடுத்தனர்.


இந்த நிகழ்வின் பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. இவற்றில் பிரியங்காவின் மகள் பாலதி தனது தாயின் மடியில் ஒய்யாரமாக அமர்ந்திருப்பதைக் காண முடிகின்றது. 


மேலும் படிக்க | பழைய பாமிற்கு வந்த நானி! அதிரடியில் மிரட்டும் தசரா டீசர்!


பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் ஆகியோர் கடந்த ஆண்டு வாடகைத் தாய் மூலம் மால்தியை பெற்றெடுத்தனர். இதற்கு முன்னரும் பிரியங்கா சோப்ரா ஜோனஸ் தனது மகளின் பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். எனினும், அவற்றில் குழந்தையின் முகத்தை அவர் காட்டியதில்லை. தற்போதுதான் இந்த நிகழ்வில் குழந்தையின் முகத்தை முதன் முறையாக பிரியங்கா உலகுக்கு காட்டியுள்ளார். 



பல புகைப்படங்களை பிரியங்கா வெளியிட்டுள்ள நிலையில், இதற்கு நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். பெரும்பாலானோர், குழந்தையை பாராட்டி, கொஞ்சி கமெண்டுகளை அளித்துள்ளார்கள். எனினும், பிரியங்காவை விமர்சிக்கும் வகையிலும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர். அவர் தனது மகளை ஒரு ‘ப்ராப்’, அதாவது போட்டோவுக்கான ஒரு காட்சிப்பொருளாக பயன்படுத்துவதாக ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். எனினும், இதற்கும் சரியான பதிலளித்துள்ள பிற பயனர்கள், குழந்தையின் முகத்தை காட்டுவதும், எப்படி புகைப்படம் எடுக்க வேண்டும் என முடிவெடுப்பதும் அவரது தனிப்பட்ட விருப்பம் என கூறியுள்ளனர். 


பிரிட்டிஷ் வோக்கிற்கு அளித்த பேட்டியில், பிரியங்கா சோப்ரா, மால்தி பற்றி வரும் எதிர்மறையான கருத்துகளுக்கு தான் செவிசாய்ப்பதில்லை என கூறியுள்ளார். பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ள பிரியங்கா சோப்ரா ஆங்கில தொலைக்காட்சித் தொடரான க்வாண்டிகோவிலும் நடித்துள்ளார். 


மேலும் படிக்க | Thalapathy 67: விஜய் அண்ணா உடன் மீண்டும் இணைகிறேன்: லோகேஷ் கனகராஜ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ