ராஜ்கிரண் சினிமா வாழ்க்கையையே திருப்பிப் போட்ட படம் என்றால் அது என் ராசாவின் மனசிலே. 20 வருடங்களுக்கு முன்பு வெளியான இப்படம் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கஸ்தூரிராஜா இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலேயே வெற்றி கண்டார். இப்படம் வெற்றி அடைவதற்கு முக்கிய காரணமே நடிகர் ராஜ்கிரணின் (Rajkiran) தொடை தெரிய வேஷ்டி கட்டுவது, எலும்பு கடிப்பது மற்றும் மீன் சாப்பிடுவது காட்சிதான். இந்தப் படத்தில்தான் மீனா, வடிவேலு ஆகியோர் நடிகர்களாக அறிமுகமானார்கள். இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இளையராஜா இசையமைத்திருந்த இந்தப் படத்தின் பாடல்கள் இப்போதும் ரசிக்கப்பட்டு வருகின்றன.


ALSO READ | மம்முட்டி, ராஜ்கிரண் நடிப்பில் வெளியாகிறது ‘குபேரன்’...


இந்நிலையில் தற்போது இந்த படத்தின் 2-ம் பாகத்தை ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்க உள்ளார். இதன் மூலம் அவர் சினிமா துறையில் இயக்குநராக அறிமுகமாகிறார்.


இதற்கிடையில் லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் 2டி தயாரிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் கார்த்தியின் தாய்மாமாவாக முக்கிய கதாபாத்திரத்தில் மதுரையில் நடக்கும் படப்பிடிப்பில் தற்போது கலந்து கொண்டு நடித்து வருகிறார்.


இதைத் தவிர நடிகர் ராஜ்கிரண் மேலும் பெயரிடப்படாத 2 படங்கள் என பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Annaatthe negative reviews: அண்ணாத்த திரைப்படத்தின் எதிர்மறை விமர்சனங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR