பிரபல திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மாவை விஜயவாடா விமான நிலையத்தில் வைத்து ஆந்திர போலீசார் சிறைவைத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் வாழ்க்கை மையமாக வைத்து லட்சுமி என்.டி.ஆர் என்ற படத்தை ராம் கோபால் வர்மா இயக்கியுள்ளார். இதில் தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தது.


இதனையடுத்து விஜயவாடாவில் நடைபெறவிருந்த இந்த படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்க படக்குழுவினருடன் ராம் கோபால் வர்மா சென்றார். விஜயவாடா விமான நிலையத்தில் அவரை தடுத்து நிறுத்திய போலீசார், சட்ட ஒழுங்கு காரணங்களுக்காக பொது இடத்தில் செய்தியாளர்கள் சந்திப்பிற்கான அனுமதி நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர். 


இந்நிலையில் இந்த படம் மே 1-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், ராம்கோபால் வர்மாவை ஆந்திராவுக்குள் வரவிடாமல் தடுக்க தெலுங்குதேசம் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.