தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் மகா சத்யன் உயிரோடு வரவேண்டும் என்றால் விஷாலை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மிரட்டிய நிலையில் இன்றைய எபிசோடில் மீரா வேறு வழியில்லாமல் அமைதியாக இருக்க உன்னுடைய அமைதியை சம்மதமாக எடுத்துக் கொள்வதாக சொல்லி மகா அங்கிருந்து கிளம்புகிறாள்.


இதைத் தொடர்ந்து விஷாலும் சைக்கோ போல் நடந்து கொண்டு மீராவிடம் பேசிவிட்டு அங்கிருந்து நகர சத்தியன் அருகே வந்த மீரா எனக்கு நீங்க உயிரோடு இருந்தா போதும் என்று சொல்லி கண் கலங்குகிறாள்.


அதன் பிறகு சீதா, ராம் மற்றும் துரை ஆகியோர் வந்து மீராவை சமாதானம் செய்து இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும் என்று சொல்ல இதுவரை நீங்கள் செய்தது போதும் இதுக்கு அப்புறம் எதுவும் செய்ய வேண்டாம் என்று சொல்லி சத்யனை சென்று சந்தித்து கண்கலங்குகிறாள். 


மேலும் படிக்க | ‘தலைவர் 171’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


அடுத்ததாக ஹாஸ்பிடலில் எல்லோரும் தூங்கிய பிறகு மீரா சத்தியனுக்கு கண்ணீருடன் பாய் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பி வருகிறாள். வீட்டுக்கு வந்ததும் மகா எங்க பேச்சு கேட்டா சத்தியன் உயிரோட இருப்பான் என்று சொல்ல சத்தியனை எதுவும் பண்ண மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணி கொடுங்க என்று மீரா கேட்க அவன் உன்னை காதலித்ததால் தான் எனக்கு எதிரியானான், இல்லனா அவன் என் பக்கத்துல கூட வர முடியாது என்று மகா சொல்கிறாள். பிறகு மீரா சேர்ந்துவிடும் அடுத்த ஜென்மம் ஒன்று அண்ணன்கள் இல்லாத வீட்டில் பிறக்கணும் என்று சொல்லி செல்ல சேதுவின் முகம் மாறுகிறது.


மறுநாள் காலையில் சீதா, ராம் துரை என எல்லோரும் எழுந்து உயிராக காணவில்லை என செக்யூரிட்டிக்கு போன் செய்ய மீரா அம்மா வீட்டுக்கு வந்து விட்டதாக சொல்ல இவர்கள் சாதாரணமாக இருந்து விடுகின்றனர். 


இங்கே மகா விஷாலுக்கும் மீராவிற்கும் கல்யாண ஏற்பாடுகளை செய்து வைத்திருக்க மறுபுறம் சீதாவிற்கு சந்தேகம் எழுகிறது. விஷாலுடன் மீரா மணமேடை ஏற சீதா குழப்பத்தோடு யோசனையில் இருக்கிறாள். 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | கேப்டன் அமெரிக்காவிற்கு கல்யாணம் ஆயிடுச்சா..? 26 வயது இளம் நடிகையை கரம் பிடித்த கிறிஸ் எவான்ஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ