தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல். 


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராமின் தங்கைகளான சத்தியா, பிரியா மற்றும் அஞ்சலி மூவரும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தது சீதா மற்றும் ராமுக்கு தெரிய வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அவங்களுக்கு பயம் வரணும்: சீதா


அதாவது ராம் இத உடனடியா சித்தி கிட்ட சொல்லி ஆகணும் என்று சொல்ல சீதா வேண்டாம்பாஸ் இந்த ஒரு முறை அவங்களுக்கு வார்னிங் கொடுக்கலாம் நீங்க ஒரு அண்ணனா அவங்கள மிரட்டி வையுங்க அவங்களுக்கு ஒரு பயம் வரணும் திரும்பவும் இந்த தப்பு செய்ய கூடாது என்று சொல்கிறாள். 


மறுநாள் காலையில் ராம் மற்றும் சீதா இருவரும் மூவரும் தூங்கிக் கொண்டிருக்கும் இடத்தில் வந்து நிற்க அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து எழுந்து கொள்கின்றனர். ராம் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் கார்டனுக்கு வாங்க என்று சொல்ல மூவரும் எதுக்கு என்ன விஷயம் என்று திமிராக கேட்க நீங்களா வந்தீங்கன்னா நல்லபடியா பேசலாம் இல்லனா அந்த மாதிரி பேசணும் என சீதா மிரட்ட வேறு வழியில்லாமல் மூவரும் கார்டனுக்கு செல்கின்றனர். 


மேலும் படிக்க | Leo Day 6 Box Office: 6 நாளில் 250 கோடி வசூலா? மிரட்டும் விஜய்யின் லியோ


அதிர்ச்சி அடையும் தங்கைகள்


ராம் அவர்களிடம் எத்தனை பீர் பாட்டில் குடித்தீங்க என்று கேட்க அதிர்ச்சி அடையும் அவர்கள் மன்னிப்பு கேட்க ராம் இது எத்தனாவது முறை எவ்வளவு நாளா இப்படி நடக்குது என்று கேட்க மூன்றாவது முறையென சொல்கின்றனர். இனிமே இந்த மாதிரி தப்பு பண்ண கூடாது அப்படி பண்ணீங்கன்னா சித்தி கிட்ட சொல்லிடுவேன் என மிரட்டி மூவரிடமும் சாமி மேல சத்தியம் வாங்குகிறான் ராம். 


அதை தொடர்ந்து இவர்கள் மூவரும் ஒன்றுகூடி பிளான் போட்டு ராமண்ணா சித்தி கிட்ட சொல்றதுக்கு முன்னாடி நாமளே சொல்லணும் ஆனால் அதை இந்த சீதா பொய் சொல்லி ராமன் நான் வச்சு நம்மள மிரட்டடா என்பது போல மாத்தி சொல்லணும் என்று பிளான் போடுகின்றனர். 


அதைத்தொடர்ந்து செக்யூரிட்டியை அழைத்து நாங்க சொல்ற மாதிரி சொல்லணும் இல்லனா சாப்பாட்டில் விஷத்தை வைத்து கொன்னுடுவோம் என்று மிரட்டி அனுப்புகின்றனர். 


பிறகு மூவரும் மகாவிடம் வந்து சீதா ராமன் அண்ணன் வச்சு பொய் சொல்லி மிரட்டுவதாக சொல்ல சேது பொறுமையா என்ன நடந்துச்சுன்னு கேளு என்று சொல்ல மகா சீதாவை கூப்பிட ராம் மற்றும் சீதா இருவரும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததை சொல்கின்றனர். 


சீதா ராமுக்கு அதிர்ச்சி


செக்யூரிட்டியை கூப்பிட்டு கேளுங்க என்று மூவரும் சொல்ல செக்யூரிட்டி எனக்கு எதுவும் தெரியாது. மூன்று பேரும் கார்ல ஒண்ணா வந்தாங்க கதவை திறந்து விட்டேன் அவ்வளவுதான் என்று சொல்ல சீதா மற்றும் ராம் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றனர். 



காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு இவ்வளவு செல்வமா? இதோ சொத்து மதிப்பு விவரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ