தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் முந்தைய எபிசோடில் விஷால் சத்யனை தூக்க ஆட்களுடன் காத்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அர்ச்சனா பேசியது சரியில்லை: துரை


அதாவது, சீதா வாசலில் கோலம் போட்டு கொண்டிருக்க ராமின் தங்கைகள் என்ன ரெஜிஸ்டர் மேரேஜ்க்கு கிளம்பலையா என்று நக்கலாக கேட்க சீதா இவங்க ஏதோ பிளான் பண்ணி இருக்காங்க என்று தெரிய வருகிறது, உடனே தூங்கி கொண்டிருக்கும் ராமை எழுப்பி விஷயத்தை சொல்ல மாமா துரையும் வந்து எனக்கும் அப்படி சந்தேகம் இருக்கு, அர்ச்சனா பேசியது சரியில்லை என்று சொல்ல சத்யனை ஏதாவது பண்ணிடுவாங்களோ என்ற பயம் உருவாகிறது. 


பதட்டத்தில் ராமும் சீதாவும்


இங்கே சத்யன் போனை மறந்து வீட்டிற்குள் வைத்து விட்டு வாக்கிங் போக வெளியே வர ஆட்களுடன் இருக்கும் விஷால் சத்யனை அடித்து தூக்க தயாராகுகிறான். அதற்குள் ராம் சத்யனுக்கு தொடர்ந்து போன் செய்தும் எடுக்காத காரணத்தால் இவர்களுக்கு பயமும் பதற்றமும் உருவாகிறது. போன் ஞாபகம் வந்த சத்யன் அப்படியே யூ டர்ன் அடித்து வீட்டிற்கு நுழைய விஷால் டீம் கடுப்பாகிறது. 


வீட்டிற்கு வந்த சத்யன் ராம் தொடர்ந்து போன் செய்திருப்பதை பார்த்து திரும்ப போன் செய்ய உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே என்று கேட்டு நிம்மதி அடைகின்றனர். மேலும் வீட்டை விட்டு எங்கும் வெளியே போக வேண்டாம் என்று சொல்லி அவனை வீட்டிலேயே இருக்க வைக்கின்றனர். 10 மணிக்கு ரெஜிஸ்டர் ஆபிசில் மீட் பண்ணலாம் என்று சொல்லி சத்யன் போனை வைக்கிறான். 


மேலும் படிக்க | ரஜினி ஒரு சித்தர்.. அவருக்கு எல்லாமே தெரியும் - பிரபல நடிகர் பேச்சு!


மீராவை காணாததால் சீதாவுக்கு அதிர்ச்சி


அடுத்து மீராவை எழுப்பி சீக்கிரம் கிளம்பலாம் என்று மீரா ரூமுக்கு சென்று பார்க்க மீராவை காணவில்லை. வீடு முழுக்க தேடியும் கிடைக்காததால் பதற்றம் அதிகமாகிறது, தங்கைகளிடம் கேட்க அவர்கள் எங்களுக்கு தெரியாது என்று சொல்லி விடுகின்றனர். செல்வியை விசாரிக்கும் போது நைட் பால் கொண்டு போக தயாரான போது நடந்த விஷயங்களை சொல்கிறார். இதனால் இது மகாவின் பிளான் தான் என்பது தெரிய வருகிறது. 


ராம் தங்கைகளை அடித்து விஷயத்தை கேட்கும் போது பாலில் தூக்க மாத்திரை கலந்த விஷயத்தை சொல்ல எல்லாரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.



சீதா நீங்க சத்யனை கூட்டிட்டு ரெஜிஸ்டர் ஆபிஸ் வாங்க, நான் மீராவை எப்படியாவது கண்டு பிடிச்சு கூட்டிட்டு வரேன் என்று சீதா சத்யம் செய்ய ராம் கிளம்பி செல்கிறான். 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | “ப்பா ஸ்டைலுனா அவளோட ஸ்டைலுதான்..” கீர்த்தி சுரேஷின் வைரல் புகைப்படங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ