ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.  இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் குலசேகர பட்டிணம் கோவிலுக்கு மகாலட்சுமி, அர்ச்சனா, சுபாஷ், சேதுபதி ஆகியோர் கோவிலுக்கு வர சூர்யா, மதுமிதாவை தங்களது பக்கம் இழுப்பதற்கு திட்டம் போடுகின்றனர்.  மதுமிதாவை கோவிலுக்கு வர வைக்கும் மகா நான் தப்பு பண்ணிட்டேன், என்னை மன்னிச்சிடு என ட்ராமா போட்டு மதுவை தன் பக்கம் இழுக்கிறாள். மகாவின் நடிப்பை நம்பும் மதுமிதா மகா தோளில் சாய்ந்து கண் கலங்குகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | சமந்தா தினமும் கேட்கும் மந்திரம் இதுவா... அவரே போட்ட பதிவு!


இங்கே சீதாவின் மிரட்டலால் ராமின் தங்கைகள் துணி மாற்றிக் கொண்டு வெளியே வர ராம் அதை பார்த்து சந்தோஷம் அடைகிறான். பிறகு சீதா அவர்களுக்கு பூ வைத்து விட்டு அனுப்ப அவர்கள் பேகிற்குள் மாடர்ன் உடையை மறைத்து எடுத்து செல்கின்றனர். கடைசியில் அவர்கள் காலேஜ் சென்று பையை திறந்து பார்க்க அதில் மாடர்ன் உடை இல்லை என தெரிந்து அதிர்ச்சியாகின்றனர். ஃப்ளாஷ்கட்டில் சீதா அந்த துணியை எடுத்து விட்ட விஷயம் தெரிய வருகிறது. இதனால் கோபமாக வீட்டுக்கு வரும் தங்கைகள் சீதா பூஜை செய்து கொண்டிருக்க பூஜை தட்டை தட்டி விட்டு கோபப்பட ராம் தங்கைகளை திட்ட அவர்கள் மூவரும் ராமையும் தப்பாக பேசுகின்றனர். 


இதனால் கோபமாகும் சீதா மூன்று தங்கைகளில் ஒருவரை பளாரென அறைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.  நேற்றைய எபிசோடில், மகாலட்சுமி சீதா போட்ட கோலத்தை தண்ணீர் ஊற்றி கலைத்த நிலையில் வீட்டுக்குள் வரும் சீதா தூங்கிக் கொண்டிருக்கும் ராமின் தங்கைகள் மூன்று பேர் மீது தண்ணீரை ஊற்றி எழுப்பி அவர்களை கோலம் போட வைக்கிறாள்.  அர்ச்சனா மற்றும் மகா இருவரும் கோவப்பட சீதா நான் என்ன அவங்களுக்கு சரக்கு போடவா கத்துக் கொடுக்கிறேன்? கோலம் போடத் தானே கற்றுக் கொடுக்கிறேன் என கோபப்படுகிறாள். மேலும் ராமின் தங்கைகளை டார்ச்சர் செய்து கோலம் போட வைக்கிறாள். 


அதன் பிறகு ராமின் தங்கைகள் காலேஜில் கல்ச்சுரல் பங்க்ஷன் நடப்பதால் மாடர்ன் உடையில் காலேஜ் கிளம்ப அதைப் பார்த்த ராம் என்ன டிரஸ் இது என கேட்க கல்ச்சுரல்ஸ் ப்ரோக்ராம்க்கு நாங்க இப்படித்தான் போவோம் என சொல்கின்றனர். ராம் இது பற்றி சீதாவிடம் சொல்லி வருத்தப்படுகிறான். இதனால் சீதா இவர்கள் மூவரையும் ராமுக்கு பிடித்த மாதிரி டிரஸ் போட வைக்க வேண்டும் என முடிவெடுக்கிறாள். மறுபக்கம் மகாலட்சுமி, அர்ச்சனா ஆகியோர் முதலில் மது மற்றும் சூர்யாவை சென்னைக்கு கொண்டு வர வேண்டும். அவர்கள் நம்மை நம்பும் அளவிற்கு மாற்ற வேண்டும் என்று கஞ்சா கடத்துபவனை வைத்து திட்டம் ஒன்றை தீட்டுகின்றனர். அடுத்ததாக சீதா ராமின் தங்கைகள் மூவரையும் பாவாடை தாவணி போட்டுகிட்டு தான் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என மிரட்டி அவர்களை டிரஸ் மாத்த வைக்கிறாள்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து காண்பிக்கப்பட்டது.


மேலும் படிக்க | வீட்டு வாசலுக்கு சென்ற ரசிகர்! விக்ரம் செய்தது என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ