தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 


இந்த சீரியல் நேற்றைய எபிசோடில் தூக்கத்திலிருந்து எழுந்த ராம் அப்பாவும் சித்தப்பாவும் ஜெயிலில் இருப்பதை நினைத்து சீதாவிடம் வருத்தப்பட வெளியில் இருந்து இதைக்கேட்ட மகா இருவரும் கொஞ்சிக் கொண்டிருப்பதாக தவறாக நினைத்து மூன்று பெண்களுடன் ரூமுக்குள் நுழைந்து அப்பாவும் சித்தப்பாவும் ஜெயிலில் இருக்கும்போது இப்படி கொஞ்சிக்கிட்டு இருக்கீங்க உங்களுக்கு கேவலமா இல்லையா என்று கேள்வி கேட்கிறாள். 


இதுதான் அநாகரீகம்: சீதா பதிலடி
 
இதனால் ராம் அதிர்ச்சி அடைய சீதா அவர் அப்பாவையும் சித்தப்பாவையும் பற்றி சொல்லித்தான் அழுதுகிட்டு இருந்தாரு, கொஞ்சிக்கிட்டு ஒன்னும் இல்லை என்று சொல்ல மகாவும் மூன்று தங்கைகளும் உங்கள் முகத்தைப் பார்த்தாலே தெரியுது என அவமானப்படுத்தி பேச சீதா எது அநாகரிகம்? புருசன், பொண்டாட்டி இருக்கிற ரூமோட கதவை தட்டாமல் இப்படி உள்ள வந்து இருக்கீங்களே இதுதான் அநாகரிகம் என பதிலடி கொடுக்கிறாள். 


மகாவுக்கு ஷாக் கொடுத்த ராம்


அதோட ராம் அம்மா மட்டும் இருந்திருந்தால் இப்படி அப்பாவையும் சித்தப்பாவையும் ஜெயிலுக்கு போக விட்டிருப்பாங்களா என்று கேள்வி கேட்க மகா அதிர்ச்சி அடைகிறாள். மகா திரும்பவும் எதையும் பேச வர ராம் மீண்டும் உங்க அக்கா இருந்தா இப்படி நடந்து இருக்குமா என கேள்வி கேட்டு ஷாக் கொடுக்கிறான். 



இதனைத் தொடர்ந்து சீதா ராமிடம் இனிமேல் இந்த குடும்பத்தை நீங்கதான் வழி நடத்தணும். நல்லது கெட்டது எடுத்து சொல்லணும் என மஹாவின் இடத்தை பறித்து ராமிடம் கொடுக்க முயற்சி செய்கிறாள். இதனால் மகா கடும் கோபத்தோடு வெளியே வர எல்லாம் சீதா தான் என ராமின் தங்கைகள் எல்லோரும் மகாவை ஏற்றி விடுகின்றனர்.  


மேலும் படிக்க | அஜித் இனிமேல் இப்படி செய்ய கூடாது! கடிதம் அனுப்பிய முக்கிய நிர்வாகி!


சவால் விடும் மகா


உடனே மகா இது நானும் சீதாவும் ஆரம்பித்த போர், நானே இதை முடிவுக்கு கொண்டு வரேன் என சவால் விடுகிறாள். மறுநாள் மகா வாக்கிங் செல்ல அர்ச்சனாவை கூப்பிட அவள் இந்த நேரத்தில் இதெல்லாம் தேவையா என கேள்வி கேட்கிறாள். வீட்ல இருந்தா எதுவும் செய்ய முடியாது என்று மகா அர்ச்சனாவை அழைத்துக் கொண்டு வெளியே கிளம்ப சீதா மீராவுடன் எதிரே வந்து நிற்கிறாள். 


வெளியே போகும்போது முக்காடு போட்டுட்டு போங்க நம்ம செக்யூரிட்டி எல்லார்கிட்டயும் மாமாவும் சின்ன மாமாவும் கஞ்சா கேஸ்ல தான் ஜெயிலுக்கு போய் இருக்கிறதா சொல்லி வெச்சி இருக்காரு, அதனால அவமானமா போயிடும் என நக்கல் அடிக்க மகா அதெல்லாம் போட முடியாது என்று வெளியே கிளம்ப அப்போது செக்யூரிட்டி யாரோ ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்க மகா அவனிடம் சென்று என்ன பேசிக்கிட்டு இருக்க? அவர் கஞ்சா கேஸ்ல தான் உள்ள போயிட்டாருனு சொல்லிக்கிட்டு இருக்கியா என்ன கோபப்படுகிறாள். 



உடனே செக்யூரிட்டி ஐயா கஞ்சா கேஸ்லயா உள்ள போயிருக்காரு என்று கேள்வி கேட்டு மகாவுக்கு ஷாக் கொடுக்க செக்யூரிட்டிக்கு இதுவரை எதுவும் தெரியாது என தெரிய வருகிறது. அதன் பிறகு மகா வெளியே கிளம்ப சீதா முக்காடு போடும்படி சைகையில் நக்கல் அடிக்கிறாள். 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்


சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | மாவீரன் படத்தின் 10 நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ