காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் ஜோதி! பரபர திருப்பங்களுடன் சண்டக்கோழி சீரியல்

Sandakozhi serial Update: காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் ஜோதி.. நந்தினி போடும் திட்டம், சவால் விடும் மகா - பரபர திருப்பங்களுடன் இன்றைய சண்டக்கோழி சீரியல் அப்டேட் இதோ.  

Written by - RK Spark | Last Updated : Jul 25, 2023, 11:34 AM IST
  • காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் ஜோதி.
  • நந்தினி போடும் திட்டம், சவால் விடும் மகா.
  • இன்றைய சண்டக்கோழி சீரியல் அப்டேட் இதோ.
காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் ஜோதி! பரபர திருப்பங்களுடன் சண்டக்கோழி சீரியல்   title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 2.15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சண்டக்கோழி.  இந்த சீரியலில் கடந்த வாரம் மணமேடை வரை வந்த விஜய், ஐஸ்வர்யாவின் கல்யாணத்தை நந்தினி நிறுத்திய நிலையில் ஜோதி மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில் வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.  அதாவது, முதலில் ஜோதியை காப்பாற்றுவது கஷ்டம் என்று சொல்லும் டாக்டர் அதன் பிறகு 48 ரூபாயில் ஒரு ஊசி போட்டு அவரை காப்பாற்றி விடலாம், பிறகு சிறு ஆபரேஷன் செய்து கொள்ளலாம் என்று சொல்கின்றனர், இந்த விஷயம் அறியும் விஜய் ஆஸ்பிடலுக்கு கிளம்ப நந்தினி அவனை தடுக்க முயற்சி செய்ய அவன் அம்மாவை மீறி கிளம்பி வருகிறான். 

மேலும் படிக்க | ஹீரோவாக அறிமுகமாகும் தோனி! அதுவும் இந்த படத்திலா?

zee

ஹாஸ்பிடலுக்கு வந்த அவன் அங்கு எடுபுடி வேலைகளை செய்ய இதனை பார்த்த நந்தினி கோபப்பட்டு விஜயை கூப்பிட அவன் வர மறுக்கிறான். இதனால் நந்தினி அதிகாரத்தால் ஒன்றும் செய்ய முடியாது, அன்பை காட்டி மகனை வழிக்கு கொண்டு வர முடிவெடுக்கிறாள். தன்னை அடித்த மகா மன்னிப்பு கேட்டால் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் என்று சொல்ல மகா மன்னிப்பு கேட்க மறுக்கிறாள். மேலும் நந்தினியிடம் வந்து எங்க அம்மாவும் உயிரோட இருப்பாங்க, நீங்களும் இருப்பீங்க.. எல்லாருடைய சம்மதத்துடன் இந்த கல்யாணத்தை நடத்தி காட்டுறேன் என சவால் விடுகிறாள், புலி முருகன் மகா நந்தினியை எதிர்த்து பேசிய விஷயங்களை சொல்லி ஜோதியை ஏற்றி விட அவன் மகாவை அறைந்து மன்னிப்பு கேட்க சொல்ல மகா மறுக்க ஐஸ்வர்யாவும் அப்படி ஒரு கல்யாணம் எனக்கு தேவையில்லை என அதிர்ச்சி கொடுக்கிறாள். 

இதனை தொடர்ந்து ஜோதி யாருக்கும் தெரியாமல் நந்தினியை சந்தித்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி அனுப்பி அவங்களே இந்த கல்யாணம் வேண்டாம்னு ஓட வைக்கிறேன் என பிளான் போடுகிறாள். பிறகு ஜோதியை நாள் குறிக்க வீட்டுக்கு வர சொல்லி நந்தினி வெளியே சென்று விட்டு மணிக்கணக்காக காக்க வைக்க அவள் மயங்கு விழும் தருணத்தில் மகா வானத்து தாங்கி பிடித்து காப்பாற்றுகிறாள்.  அதன் பிறகு கோவிலில் வைத்து நிச்சயம் செய்ய முடிவெடுக்க நந்தினி வேண்டுமென்றே பல தடங்கல்களை உருவாக்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே சண்டக்கோழி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News