தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.


இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சீதா மகாலட்சுமியை துப்பாக்கி முனையில் வைத்து மரண பயம் காட்டிய நிலையில் இருவரும் மாறி மாறி சவால் விட்டு கொண்டனர். இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


தூக்கத்தில் இருந்து எழுந்த ராம்


அதாவது, சீதாவும் ராமும் ரூமுக்குள் இருக்க ராம் கட்டிலில் படுத்து தூங்க சீதா கீழே உட்கார்ந்து யோசனையில் இருக்க அந்த சமயம் பார்த்து திடீரென அவளுக்கு ராம் தன்னுடைய அம்மா எப்போதும் நல்ல விசியத்துக்காக நடிக்கிறது தப்பு இல்லைனு சொல்வாங்க என்று பேசியது ஞாபகத்திற்கு வந்து சீதா அழுவது போல நடிக்கிறாள். ரொம்ப சத்தமாக அழ ராம் தூக்கத்தில் இருந்து எழுந்து என்னாச்சு? ஏன் அழுகிற என கேட்க ஒன்னும் இல்ல நீங்க படுத்து தூங்குங்க என்று சொல்கிறாள். 


கனவை பற்றி சொல்லும் சீதா


உடனே ராம் நீ இப்படி சத்தமாக அழுதா எப்படி தூங்குறது? என்ன விசியம் என்று கேட்க என்னுடைய கனவில் ஒருத்தவங்க வந்தாங்க, ரொம்ப நேரம் உங்களையே பார்த்து விட்டு அப்புறம் என்னை பார்த்து மன்னிக்கிறது தெய்வீக குணம் என்று சொன்னாங்க என்று சொல்ல ராம் அவங்க எப்படி இருந்தாங்க என்று கேட்கிறான். 



உடனே சீதா ஹாலில் மாட்டி இருக்கும் போட்டோவில் இருப்பவரை போலவே இருந்தாங்க என்று சொல்ல ராம் என்னுடைய அம்மா தான் வந்திருக்காங்க, உன் மேல எந்த தப்பும் இல்லை, அதனால தான் உன்னை பாக்க வந்திருக்காங்க என சொல்ல ராம் அப்படியே நம்பி விடுகிறான். 


மேலும் படிக்க | பட வேட்டைக்கு தயாரா மக்களே? இந்த மாதம் வெளியாகவுள்ள படங்களில் லிஸ்ட்!


டிராமா போடும் சீதா, மீரா


இதனையடுத்து மறுநாள் காலையில் எல்லோரும் சாப்பிட உட்கார சீதாவும் மீராவும் சேர்ந்து ஒரு டிராமா போட்டு அர்ச்சனா வாயால் சீதாவை மேல உட்கார்ந்து சாப்பிட சொல்ல வைக்கின்றனர்.



அதனை தொடர்ந்து ராம், சீதா மற்றும் மதுமிதா ஆகியோர் சூர்யாவை பார்க்க கோர்ட்டுக்கு வருகின்றனர். 


கோபப்பட்டு மதுமிதாவை அறையும் சூர்யா


அங்கு சூர்யாவை பார்த்து பேசும் மது நீ தான் தப்பு பண்ணி இருக்க, தப்பை ஒத்துக்க உனக்கு தண்டனை குறையும் என சொல்ல அவன் சீதா சொல்லி இப்படியெல்லாம் பேசுறாயா என கோபப்படுகிறான். மதுமிதா நீ எதுக்கு அவளை இழுக்குற? ஹவுஸ் ஓனர், உன்னுடைய ஓனர் என எல்லாரும் நீ தான் தப்பு பண்ணணு சொல்லிட்டாங்க என்று சொல்ல சூர்யா கோபப்பட்டு மதுமிதாவை அறைந்து விடுகிறான். 


கண்கலங்கும் மதுமிதா


இதனால் மதுமிதா கண் கலங்கி அழ ராமும் சீதாவும் அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்கின்றனர்.



காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | “நான் பார்த்ததிலேயே அழகான பெண்களில் ஒருவர் கீர்த்தி..” மாமன்னன் படவிழாவில் போனி கபூர் பேச்சு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ