மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு ஓபனா பேசினா என்னவாகும்? கார்த்திகை தீபம் சீரியலைப் பாருங்க!

Karthigai Deepam Today’s Episode: ஐஸ்வர்யா, மீனாட்சி இடையே வெடித்த மோதல்.. உண்மையை கண்டு பிடிக்க கார்த்திக் எடுத்த முடிவு - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 1, 2023, 11:15 AM IST
  • மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு ஓபனாக பேசிட்டீங்க! கலாய்க்கும் வேலைக்காரி
  • தீபாவை வீட்டை விட்டு துரத்த திட்டம் போடும் குடும்பம்
  • சாப்பாட்டுத் தட்டை தட்டிவிடும் ஐஸ்வர்யா?
மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு ஓபனா பேசினா என்னவாகும்? கார்த்திகை தீபம் சீரியலைப் பாருங்க! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலாமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் இந்த சீரியலில் தீபா வீட்டுக்குள் வர அபிராமி அவளுக்கு சில கண்டிசன்களை போட்ட நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட் 

தீபாவை நல்ல பொண்ணுன்னு நினைச்சிட்டு இருந்தோம், அப்படி இருக்கும் போது இப்படி கார்த்தியை கல்யாணம் பண்ணிக்குவானு யோசிக்கவே இல்லை என்று அருணும் ஆனந்தும் சொல்லிக் கொண்டிருக்கும்போது, அங்கு மீனாட்சியும் ஐஸ்வர்யாவும் இங்கு வருகின்றனர். தீபா பெரிய பிராடு என ஐஸ்வர்யா கோபமாக பேச, அவ ப்ராடுனு உங்களுக்கு எப்படி தெரியும்? அவ தப்பான பொண்ணு கிடையாது என்று மீனாட்சி சொல்கிறார்.

அன்னைக்கு அபிராமி அத்தைக்கு கண்ணு தெரியாமல் போன போது, தீபா தான் உதவி பண்ணா, அவ தப்பானவளா இருந்திருந்தால் எதுக்கு உதவனும் என கேட்கிறாள். இதைப் பற்றிய பேச்சைக் கேட்கும் ஆனந்திற்கும் தீபா நல்லவளாக இருக்க வாய்ப்புள்ளதாக தோன்றுகிறது. 

இதனையடுத்து கார்த்திக் தன்னுடைய நண்பனுக்கு போன் செய்து எங்க இருக்கேனு கேட்கிறான. அவன் ஓட்டலில் இருப்பதாக சொல்ல உன்னை நேரில் பார்க்க வரேன் என்று சொல்லி விட்டு கார்த்திக் செல்கிறான்.

மீனாட்சியும் ஐஸ்வர்யாவும் கிச்சனில் எதிரெதிராக பார்த்து கொள்ள, நீ நினைக்கிறது எல்லாம் நடக்காது, தீபா தான் இந்த வீட்டு மருமகள், உன்னால ஒன்னும் பண்ண முடியாது என்றும், தீபாவை அவமானப்படுத்தி இந்த வீட்டை விட்டு அவமானப்படுத்தி துரத்துறேன் என இருவரும் மனதில் நினைப்பது, மைண்ட் வாய்ஸாக காட்டப்படுகிறது.

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: மதுமிதாவை மீட்ட மகா.‌. சீதா விடும் சவால் - இன்றைய எபிசோட் அப்டேட்

திரும்பவும் மீனாட்சி உன்னால ஒன்னும் பண்ண முடியாது, இனிமே என்கூட தீபா இருப்பாள் என்று மைண்ட் வாய்ஸில் பேச ஐஸ்வர்யா நட்சத்திராவை புல் பவரோடு இந்த வீட்டுக்குள் கொண்டு வரேன், தீபாவோட சேர்த்து உன்னையும் வீட்டை விட்டு துரத்துறேன் என சவால் விடுகிறாள். 

அதன் பிறகு மீனாட்சி என்ன எதோ யோசனையில் இருக்கீங்க என்று கேட்க ஐஸ்வர்யா அதெல்லாம் ஒன்னும் இல்ல, கொஞ்சம் குடிக்க தண்ணி தரீங்களா என்று கேட்க மீனாட்சி தண்ணி எடுத்து வர போக நீ என்னைக்கும் எனக்கு அடிமையா தான் இருக்கனும் என ஐஸ்வர்யா யோசிக்க மீனாட்சி தண்ணி கொண்டு வரும் போது ஸ்லிப்பாகி ஐஸ்ஸ்வர்யா மீது கொட்ட அவள் எழுந்து சென்று விடுகிறாள். 

பிறகு தண்ணி கேட்டதுக்கு பதிலாக சூடா பால் கேட்டு இருக்கலாம், பாலோட சேர்ந்து நீயும் கொதித்து போய் இருப்ப என மைண்ட் வாய்ஸ் என நினைத்து ஓபனாக பேச வீட்டு வேலைக்காரி மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு ஓபனாக பேசிட்டீங்க என்று சொல்லி கலாய்க்கிறாள். 

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: மதுமிதாவை மீட்ட மகா.‌. சீதா விடும் சவால் - இன்றைய எபிசோட் அப்டேட்

அடுத்து கார்த்திக் தன்னுடைய நண்பனை சந்தித்து கல்யாணத்தில் நடந்த விசயங்களை சொல்ல அவன் தீபாவை பார்த்தா தப்பானா பொண்ணா தெரியல, நடுவுல ஏதோ தப்பு நடந்திருக்கு என்று சொல்ல கார்த்தியும் என் குடும்பத்திற்காகவும் அம்மாவிற்காகவும் உண்மையை கண்டு பிடிக்கறேன் என முடிவெடுக்கிறான். 

அதன் பிறகு வீட்டில் எல்லாரும் சாப்பிட உட்கார மீனாட்சி தீபா மட்டும் வராததால் தீபாவுக்கு சாப்பாடு கொடுக்கலாமா என்று கேட்கிறாள். அதற்கு அபிராமி அவளை பத்தி என்கிட்ட பேசாத என்று சத்தம் போடுகிறார்.

அவ நம்ம வீட்ல இருக்கா, அவளுக்கு எதாவது ஆச்சுன்னா அதுக்கு நாம தான் பொறுப்பு என்று செல்பி பாட்டி சொல்ல அபிராமி நான் சாப்பாடு குடுக்க கூடாதுனு சொல்லல அத்தை என்று சொல்கிறாள். பிறகு மீனாட்சி தீபாவுக்கு சாப்பாடு கொண்டு போய்கொடுக்கிறார்.

தீபா சாப்பிட போகும் போது ஐஸ்வர்யா தட்டை தட்டி விட்டு இவளுக்கு எதுக்கு சாப்பாடு தரீங்க? என்று கோபப்படுகிறாள்.

மீனாட்சி ஐஸ்வர்யாவை எதிர்த்து பேசுகிறாள். வேலைகாரங்களை கூப்பிட்டு இவளுக்கு யாரும் சாப்பாடு தர கூடாதுனு சொல்கிறாள், மீனாட்சிக்கும் ஆர்டர் போட நீ சொல்ற மாதிரி எல்லாம் நடக்க முடியாது என மீனாட்சி பதிலடி கொடுக்கிறாள். இதனால் தீபா வருத்தம் அடைகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | வீட்டுக்குள்ள வந்துட்டதால என்னுடைய மருமகளா ஆகிட முடியாது! சவால் விடும் அபிராமி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News