தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 


இந்த சீரியலில் சீதா வாந்தி எடுக்க மகா டென்ஷனான நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


டிராமா போடும் சீதா


அதாவது சீதாவும் மீராவும் ரூமில் பேசி கொண்டிருக்கும் சமயத்தில் துரை அங்கு வந்து மகா டாக்டரை வர வைத்து இருப்பதாக சொல்கிறான். அதன் பிறகு அஞ்சலி சீதாவை கூப்பிட வரும் போது சீதா, 'ஐயோ என்னால முடியல, மயக்கமா வருது.. ஏதாச்சும் புளிப்பான சாப்பிடணும் போல இருக்கு' என ட்ராமா போடுகிறாள். 


மகாவிடம் சவால் விடும் சீதா


அதன் பிறகு டாக்டர் சீதாவை செக் செய்து விட்டு நைட்டு என்ன சாப்டீங்க என்று கேட்க சீதா குல்பி சாப்பிட்ட விசயத்தை சொல்ல, டாக்டர் அப்போ இது சாதாரண புட் பாய்சன் என சொல்லி கிளம்ப மகா சந்தோசப்பட சீதா கூடிய விரையில் உண்மையாவே வாந்தி எடுப்பேன் என சவால் விட்டு செல்கிறாள்.


புது வீடு பார்க்கும் சூர்யா


மறுபக்கம் சூர்யா கிடைத்த பணத்தில் வீட்டை பார்த்து தேவையான பொருட்களை வாங்கி மதுமிதாவுக்கு போன் செய்து வீடு பார்த்திருப்பதை சொல்ல அவள் சந்தோஷமடைகிறாள்.


மேலும் சூர்யா உன்னுடைய சர்டிபிகேட் எல்லாத்தையும் எடுத்துட்டு வா என்று சொல்ல மதுமிதா நானும் ஒரு வேலைக்கு போறேன், சீக்கிரம் கடனை அடைச்சிடலாம் என சொல்லி போனை வைக்க இதை பார்த்த மதுவின் அண்ணி மகாவுக்கு தெரியப்படுத்த முடிவெடுக்கிறாள். 



மேலும் படிக்க | Rekha Birthday: “பல மலர் டீச்சர் வந்தாலும் நம்ம ஜெனிபர் டீச்சர் போல வருமா..”ரேகாவின் பிறந்தநாள் இன்று


இங்கே மகா வீட்டில் டென்ஷனாக உக்கார்ந்து கொண்டு சூர்யாவை இங்க வர வச்சி வீட்டில் கஞ்சாவை வச்சி நம்ம எதாவது பண்ணனும் என திட்டம் போடுகிறாள்.



அப்போது மதுமிதாவின் அண்ணி போன் செய்து சூர்யா வீடு எடுத்திருக்கும் முகவரியை கொடுக்கிறாள்.



சூர்யா வீட்டுக்கு போகும் சீதா


பிறகு மகா அந்த முகவரியை சேது மற்றும் சுபாஷிடம் கொடுத்து கஞ்சா வைக்க சொல்கிறாள். சீதாவுக்கு மகா மீது சந்தேகம் வந்து சூர்யாவின் அண்ணா மூலமாக முகவரியை வாங்கி மீராவுடன் சூர்யா வீட்டுக்கு கிளம்புகிறாள். 


அதற்குள் இங்கு சுபாஷ் மற்றும் சேது வந்து பேசி கொண்டிருக்க இதை பார்த்த சீதா அதிர்ச்சி அடைகிறாள். இறுதியாக சூர்யா மற்றும் சீதா என இருவரின் கவனத்தை திருப்பி கஞ்சா பாக்கெட்டை வைக்க சுபாஷும் சேதுவும் திட்டம் போடுகின்றனர். 



காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | Modern Love Chennai: இசைஞானிக்கு குவியும் பாராட்டு..மாடர்ன் லவ் சென்னை தொடரை நம்பி பார்க்கலாமா? ட்விட்டர் விமர்சனம் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ