ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காஞ்சனா 3. இந்த படத்தில் நடித்தவர் நடிகை அலெக்ஸாண்ட்ரா. இவர் இந்த படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் ராகவா லாரன்சின் காதலியாக ரோஸி எனும் கதாபாத்திரத்தில் அலெக்ஸாண்ட்ரா நடித்திருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் ரஷ்ய நடிகையும் மாடல் அழகியுமான அலெக்ஸாண்ட்ரா (Alexandra djavi) கோவாவில் தனது காதலருடன் வசித்து வந்தார். 24 வயதாகும் அலெக்ஸாண்ட்ரா, கடந்த வியாழனன்று வீட்டில் தூக்கில் (Suicide) பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடம்பில் வேறு எந்த காயமும் இல்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


ALSO READ | பிரபல சின்னத்திரை நடிகை விஷம் குடித்து தற்கொலை முயற்சி


இதற்கிடையில் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை அலெக்ஸாண்ட்ராவின் மர்ம மரணம் குறித்து கோவா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு, நடிகை அலெக்ஸாண்ட்ரா, சென்னையை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, போலீசில் புகார் அளித்திருந்தார். அவரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த புகைப்படக் கலைஞரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | போலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR