நடிகை சித்ரா கடந்த டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது கழுத்தில் தூக்கிட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சித்ராவின் (Actress chitraகணவர் ஹேமந்தை தீவிர விசாரணை செய்த பின்னர் கைது செய்தனர். ஹேமந்த் (Hemanth Kumarகொடுத்த அழுத்தம் காரணமாகவே சித்ராவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது.


ALSO READ | சித்ராவை போலவே இருக்கும் பிரபலத்தின் போட்டோஷூட் வைரல்!


சித்ராவுக்கு திருமணம் ஆகி ஓரிரு மாதங்களே ஆவதால் இந்த வழக்கு குறித்து RTO விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு அவர் 250 பக்கங்களை கொண்ட விசாரணை அறிக்கையை சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.


இந்நிலையில் தற்போது நடிகை சித்ராவின் ஹேண்ட் பேக்கை ஆய்வு செய்த போலீஸார் அதிலிருந்து 150 கிராம் கஞ்சா பொட்டலத்தை கண்டெடுத்தனர். இதனால் சித்ராவுக்கு குடிப்பழக்கத்துடன் சேர்ந்து கஞ்சா (Drugs) பழக்கமும் இருந்துள்ளது தெரியவருகிறது.


ALSO READ | சித்ரா மரணம்! போலீஸில் ஹேம்நாத் கூறிய திடுக் தகவல்!


எனவே சித்ராவுக்கு யாரேனும் நண்பர்கள் மூலம் கஞ்சா கிடைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஒரு வேளை ஹேமந்த் மூலம் கஞ்சா கிடைத்திருக்குமோ அல்லது அவருக்கும் அந்த பழக்கம் இருந்திருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கிறார்கள். சித்ரா கஞ்சாவை பயன்படுத்தினாரா இல்லையா என்று என்பது தெரியவில்லை. இதன் முடிவு சித்ராவின் உடல் பகுதிகள் சோதனைக்கு சென்றுள்ளது. அதன் முடிவுகள் வந்தால்தான் சித்ராவுக்கு போதை பொருள் பழக்கம் இருக்கிறதா என்பது தெரியவரும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR