தென்னிந்திய திரையுலகின் ஸ்டார் கப்புள்ஸாக திகழ்ந்தவர்கள் நாக சைதன்யா மற்றும் சமந்தா. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் 3 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இது, அவர்களின் இதயங்களை நொறுக்கியதை விட அவர்களின் ரசிகர்களின் இதயத்தை பயங்கரமாக நொறுக்கியது. இந்த நிலையில், நாக சைதன்யா ஒரு முறை சமந்தாவிற்கு ஸ்பெஷலாக ஒரு கிஃப்டை கொடுத்தார். இது பெரும் பேசு பொருளாக இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காதல் திருமணம் செய்த நாக சைதன்யா-சமந்தா!


திரையுலகில் இருக்கும் நடிகர்-நடிகைகள் பெரும்பாலான சமயங்களில் தன்னுடன் பணிபுரியும் இயக்குநர் அல்லது நடிகர்களை காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். ஜெமினி கணேசன்-சாவித்ரி தொடங்கி, சூர்யா-ஜோதிகா, அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் வரை இப்படி சினிமா ஜோடிகள் பலர் இருக்கின்றனர். அவர்களின் ஸ்டார் நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்தவர்கள்தான் நாக சைதன்யாவும் சமந்தாவும். 


விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் ஜோடியாக நடித்திருந்த இவர்கள், ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாகவே பழகி வந்தனர். சித்தார்த்தை காதலித்து வந்த சமந்தா, அந்த பிரேக்-அப்பிற்கு பிறகு நாக சைதன்யாவுடன் சில படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தார். அந்த படங்கள் ஹிட் அடிக்க, இவர்களுக்குள் இருந்த கெமிஸ்டிரியும் ஒரு காரணமாக இருந்தது. அதன் பிறகு 2017ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். 


விவாகரத்தில் முடிந்தது…!


சமந்தாவையும் நாக சைதன்யாவும் திரையிலும் பல நிகழ்ச்சிகளிலும் பார்த்த ரசிகர்கள் இவர்களின் காதலை காதலித்தனர். ஆனால், கேமராவில் பார்ப்பது போல அனைத்து உறவுகளும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாக விளங்கியது சமந்தா-நாகசைதன்யாவின் உறவு. இவர்கள் இருவரும், திருமணமான 3 ஆண்டுகளில் 2021ஆம் ஆண்டே விவாகரத்து பெற இருப்பதாக அறிவித்தனர்.


மேலும் படிக்க | சமந்தா-நாக சைதன்யா பிரிவிற்கு காரணம் என்ன? பல நாள் கழித்து மனம் திறந்த சமந்தா!


சமந்தாவிற்கு கிஃப்ட் கொடுத்த நாக சைதன்யா..!


சமந்தாவும் நாக சைதன்யாவும் திருமணம் செய்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அந்த படத்தின் ப்ரமாேஷன் நிகழ்ச்சியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்போது நாக சைதன்யா தன் மீது வைத்திருக்கும் காதல் குறித்து பேசிய சமந்தா, தனக்கு ஒரு ஹேண்ட்-பேக்கை நாக சைதன்யாக பரிசாக கொடுத்தாகவும் அதில் தனக்கு பிடித்த விஷயங்களை எழுதி, பேக்கை தன் கையால் சமந்தாவிற்கு பிடித்த நிறத்தில் பெயிண்ட் அடித்திருந்ததாகவும் கூறினார். இந்த அளவிற்கு காதலித்தவர்கள் இப்போது பிரிந்து, எங்காவது நிகழ்ச்சியில் பார்த்தால் கூட யாரோ போல பாேவது ரசிகர்களின் மனதை உடைக்கும் வகையில் இருப்பதாக பலர் பதிவிட்டு வருகின்றனர். 



சர்ச்சையில் சிக்கிய சமந்தா..


கடந்த சில நாட்களாக சமந்தாவின் போஸ்ட் ஒன்றுதான் தென்னிந்தியா முழுவதும் பேசு பொருளாக மாறியிருக்கிறது. உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன்னர் ஹைட்ரோஜன் பெராக்ஸைட் நெபுலைசரை உபயோகிக்கலாம் என இவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு மருத்துவர்கள் தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து அதற்கு விளக்கம் கொடுத்த சமந்தா “பிறர் நலன் விரும்பி” தான் நான் அது போன்ற பதிவை வெளியிட்டதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இவர் நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு ஆளாக்கப்பட்டார்.


மேலும் படிக்க | Samantha: சமந்தாவிற்கு 2வது திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ