தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த அண்ணாத்த படத்தின் முதல் பாடல் சற்று முன்னர் வெளியானது. ரஜினி பட பாடல் என்பதாலும், மறைந்த இசை வித்தகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் கடைசி பாடல் என்பதாலும், இந்த பாடல் வெளியீட்டிற்காக மக்கள் மகிழ்ச்சியும், சோகமும் கலந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டி. இமாம் இசையில் வெளிவந்துள்ள பாடல், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்துள்ளது. ரஜினி எஸ்.பி.பி காம்போவில் இதுவரை பல சூப்பர்ஹிட் பாடல்கள் வெளிவந்துள்ளன. தற்போது கடைசியாக எஸ்.பி.பி ரஜினிக்காக பாடியுள்ள இந்த பாடலும் படு மாஸாக அமைந்துள்ளது.


அண்ணாத்த படத்தின் தயாரிப்பாளர்கள் பாடலை வெளியிட்ட பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த பாடல் குறித்து ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்வீட்டில், எஸ்.பி.பி. பற்றி மிகவும் நெகிழ்ந்து எழுதியுள்ளார். 


இந்த பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் எஸ்.பி.பி. தனக்கு பாடும் கடைசி பாடல் என தான் நினைக்கவில்லை என்றும் ரஜினி குறிப்பிட்டுள்ளார். எஸ்.பி.பி சுமார் 45 ஆண்டுகளாக தமது குரலாக வாழ்ந்துள்ளார் என்று கூறியுள்ள ரஜினிகாந்த்,  எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார். 



ALSO READ: அண்ணாத்த படத்தின் முதல் பாடல் ரிலீஸ்: எஸ்.பி.பி. குரலில் கடைசியாக ஒரு இண்ட்ரோ பாடல்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth)  'அண்ணாத்த' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டதிலிருந்து ரஜினி ரசிகர்களின் ஆரவாரம் அதிகரித்து விட்டது. இந்த படத்தில் ரஜினி ஒரு கிராமத் தலைவரின் கதாபாத்திரத்தில் நடிப்பதால், ரசிகர்கள் இந்த வேடத்தில் அவரைக் காண ஆவலோடு காத்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.


இப்படத்திற்கு டி இமாம் இசை அமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் இமாம், மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தை வைத்து, அவரது மறைவுக்கு முன்னரே படத்தின் இண்ட்ரோ பாடலைப் பதிவு செய்திருந்தார். மறைந்த இசை வித்தகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் குரலில் வெளிவரும் கடைசி பாடலாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார்.


அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் நடிக்கிறார்கள். குடும்ப பொழுதுபோக்கு படமான அண்ணாத்த, ரசிகர்களுக்கான மிகப்பெரிய தீபாவளி விருந்தாக இந்த ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.


ALSO READ: சரவெடி: அண்ணாத்த செகண்ட் லுக் ரிலீஸ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR