அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்களை அனைவரும் விரும்பிப் பார்க்கும் காலம் இது. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களைப் போல பெயரும் புகழும் கிடைக்கிறது. மெகா சீரியல்கள் பலரின் குடும்பத்தின் ஒரு உறுப்பினராகவே ஆகிவிட்டன என்று சொன்னால் அது மிகையாகாது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வடிவேலு அன்னமிடம் அமுதா அவளது அண்ணனுக்கு காண்ட்ராக்டை குடுப்பதற்காக தான் இந்த நாடகம் என ஏற்றி விடுகிறான்.


அமுதாவும் அன்னலட்சுமியும் நேற்றைய எபிசோட்


அமுதாவும் அன்னலட்சுமியும் நேற்றைய எபிசோடில் செல்வராஜ் அறைக்குள் சென்று வடிவேலுவை அடிக்கிறார். அவன் செல்வராஜிடம் நான் பண்ணதை வெளில சொன்னீங்கன்னா உண்மையாவே விஷம் குடிச்சி செத்துருவேன்.. உங்க பேரப் பிள்ளை அனாதையா ஆயிரும் என மிரட்டுகிறான். 


மேலும் படிக்க | Prakash Raj: ‘ஹாய் செல்லம்’ வில்லத்தனத்திலும் ஹீரோயிசம் காட்டிய பிரகாஷ் ராஜ்ஜிற்கு பிறந்தநாள் இன்று..!


அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட்


ஆனால் அமுதா காண்ட்ராக்ட் குடுத்த விஷயத்துல என் பங்கு நிச்சயமா இல்லை என்று சொல்ல என் பிள்ளை வாழ்க்கையை நான் பார்த்துக்குறேன், உனக்கு எந்த சிரமும் வேண்டாம்மா என அன்னம் வருத்தத்துடன் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்கிறாள்.


அதற்கு அடுத்ததாக பள்ளிக் கூடத்தில் செந்தில் சாப்பிட வர, அமுதா சாப்பிடாமல் இருக்க, ஏன் சாப்பிடலை என கேக்க, மனசு சரியில்லை என அமுதா சொல்கிறாள். 



உடனே செந்தில் இந்த பள்ளிக் கூடம் சம்மந்தமான பொது விஷயம், நியாயம் எதுவோ அதை தான் நீ பண்ணனும். இப்ப நீ சாப்பிடலேன்னா நான் ஊட்டி விடுவேன் என சொல்கிறான். 


மேலும் படிக்க | அன்னம் போட்ட கண்டிஷனால் அமுதா எடுத்த முடிவு - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்


அதற்கு அடுத்ததாக அமுதா அன்னத்திடம் பேச முயல, அன்னம் அவளை அவாய்ட் செய்கிறாள். இருந்தாலும் அமுதா தொடர்ந்து பேச அன்னலட்சுமி அவளிடம் நீ உன் அண்ணனுக்கு காண்ட்ராக்ட் குடுக்க போறேன்னு சொல்லிருந்தா நான் அதை கேட்டுருக்கவே மாட்டேன் என சொல்ல, மாணிக்கம் அன்னத்தை திட்டுகிறார். 


பிறகு செல்வராஜ் செந்தில் வீட்டிற்கு வந்து சுமதி வளைகாப்பிற்கு அழைக்க அமுதா அப்பாவை அழைத்தால் வருவார் என செல்வராஜிடம் சொல்கிறாள். 


பின்னர் அமுதா அப்பா சிதம்பரத்தை அழைக்க வீட்டிற்கு வர, நாகு அவளை வெறுப்பேற்றுகிறாள். அடுத்து அமுதா சிதம்பரத்தை சந்தித்து விஷயத்தை சொல்கிறாள். 


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? சிதம்பரம் எடுக்க போகும் முடிவு என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | Thalapathy 68: விஜய் - வெங்கட்பிரபு படத்தின் பூஜை எப்போது? வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ