Gautham Vasudev Menon Real Life Love Story Inspiration for VTV Vaaranam Aayiram: கோலிவுட் உலகின் காதல் பட இயக்குநர்களுள் முக்கியமான இடத்தை பெற்றவர், கெளதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கும் படங்கள் எதை கற்றுக்கொடுக்கிறதோ இல்லையோ, காதலிக்க ஆசைப்படும் இளைஞர்களுக்கு அதை எப்படி செய்ய வேண்டும் என்று நன்றாகவே கற்றுத்தரும். விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், மின்னல் போன்ற பல படங்களில் காதலை தனித்துவமான விதத்தில் காட்டிய கெளதமின், உண்மையான காதல் கதை எது தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கெளதம் மேனனின் காதல் கதை..


படைப்பாளிகள் அனைவரும், தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்துதான் கொஞ்சம் திரித்து, கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து படைப்புகளை உருவாக்குவர் என பலர் கூறுவர். கலை உலகில் இருப்பவர்களும் இதை மறுப்பதில்லை. அப்படி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்து படத்திற்காக கதை எழுதிய இயக்குநர்களுள் ஒருவர், கெளதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் கதை, இவரது கதை என கூறப்படுகிறது. 


விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் ஹீரோவை விட ஹீரோயின் வயது மூத்தவராக இருப்பார். அது மட்டுமன்றி, அந்த படத்தின் கதாநாயகி ஒரு மலையாள கிறிஸ்தவராகவும் இருப்பார். இது, கெளதம் மேனனின் உண்மை கதையாம். தனது வீட்டிற்கு கீழ் குடியிருந்த பெண் மீது காதலில் விழுந்ததாகவும் ஆனால் அந்த காதல் கைகூடவில்லை என்றும் ஒரு நேர்காணில் கூறியிருக்கிறார். 


மேலும் படிக்க | லீக்கானது இந்தியன் 2 ரிலீஸ் தேதி வெளியீடு.. உற்சாகத்தில் கமல் ரசிகர்கள்


வாரணம் ஆயிரம் படத்தின் கதையும் உண்மையா? 


கெளதம் வாசுதேவ் மேனன், ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யா, துருவ் மற்றும் ஆத்யா என மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களின் திருமணம், காதல் திருமணம் ஆகும். இந்த கதையையும் கூட, தனது படத்தில் உபயோகித்திருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன். 


வாரணம் ஆயிரம் படத்தில், முதலில் ரயில் பயணத்தை பார்த்து மேக்னா என்ற பெண்ணை காதலிக்க சூர்யா, அவள் இறந்து சில வருடங்களுக்கு பின்பு தனது தங்கையின் தோழி பிரியாவை காதலிப்பது போன்று கதையமைக்கப்பட்டிருக்கும். கெளதம், மேக்னா போன்ற பெண்ணை காதலித்தாரா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், தன்னுடன் நீண்ட நண்பராக இருந்தவரைத்தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். வாரணம் ஆயிரம் படத்தில் பிரியாவின் கதாப்பாத்திரத்திற்கான உந்துதல் இங்கிருந்துதான் இவருக்கு கிடைத்துள்ளது. இது குறித்து அவர் ஒரு நேர்காணலில் பேசிய போது, “ஒரு பெண்ணும் ஆணும் எப்போதும் நண்பர்களாக இருக்க முடியாது என்று கூறுவர். அது உண்மையல்ல. எனது விஷயத்தில் நான் எனக்கு தோழியாக இருந்தவரை திருமணம் செய்து கொண்டேன். பலர் அப்படி செய்வதில்லை. அவர்கள் நண்பர்களாகவே பல நாட்களுக்கு தொடர்கின்றனர்” என்று கூறினார்.



காதல் படங்களை மட்டுமல்ல, கௌதம் மேனன் ஆக்‌ஷன்-த்ரில்லர் படங்களையும் இயக்கியிருக்கிறார். காக்க காக்க படமாக இருந்தாலும் சரி, வேட்டையாடு விளையாடு படமாக இருந்தாலும் சரி, அதில் என்னதான் ரக்கட் ஆன காவல் அதிகாரிகளை காட்டியிருந்தாலும் அவர்களின் காதல் கதை பாகங்களில் இவர் எழுதியிருக்கும் டைலாக்குகள் இன்று வரை பல இளசுகளுக்கு ப்ரப்போஸ் செய்ய உதவி வருகிறது.


கெளதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக வெளியாகாமல் உள்ள நிலையில், அவரது “ஜோஷுவா இமை போல் காக்க” படம் வரும் மார்ச் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படங்கள் இயக்குவது மட்டுமன்றி, கெளதம் வாசுதேவ் மேனன் பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து வருகிறார். 


மேலும் படிக்க | காமெடியன் டூ ஹீரோவான சூரி! தற்போது சம்பளம் எவ்வளவு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ