Dinesh Ex Wife BB 6 Tamil Contestant Serial Actress Rachitha Mahalakshmi Marriage: வெள்ளித்திரையில் உள்ள நடிகர்கள்-நடிகைகளுக்கு எந்த அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ, அதே அளவில் சின்னத்திரையில் உள்ள நடிகர்-நடிகைகளுக்கும் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த வகையில், பல இளைஞர்களின் மனதில் இடம் பிடித்துள்ளவர், ரச்சிதா மகாலக்ஷமி. ஏற்கனவே தான் நடித்த தொடர்களின் மூலம் பிரபலமான இவர், பிக்பாஸ் 6 நிகழ்ச்சி மூலம் இன்னும் பலரால் அறியப்பட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரச்சித்தா மகாலட்சுமி:


பெங்களூருவில் பிறந்து வளர்ந்த ரச்சிதா, ஆரம்பத்தில் கன்னட சீரியல்களில் நடித்து வந்தார். இவரது நடிப்பை பார்த்து வியந்த தமிழ் சின்னத்திரை இயக்குநர்கள், ‘பிரிவோம் சந்திப்போம்’என்ற தொடர் மூலம் ரசிகர்களுக்கு ஜோதி என்ற கதாப்பாத்திரம் மூலம் அறிமுகமானார். இந்த தொடரில், தனது இயற்கை நிறத்தை மாற்றி நிறம் குறைவான பெண்ணாக நடித்திருப்பார் ரச்சிதா. 


இதையடுத்து அவருக்கு வெவ்வேறு சேனல்களில் வெவ்வேறு கதாப்பாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அவற்றில் நடித்து கொண்டிருந்த போது, ரச்சிதாவிற்கு வந்த வாய்ப்பு, ‘சரவணன் மீனாட்சி2’. இந்த தொடரின் முதல் சீசன் ஹிட் அடித்ததை தொடர்ந்து இரண்டாவது சீசனில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதில் அவர், ‘தங்க மீனா’ எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இவருக்கு ஜோடியாக ஒரு சீசனில் கவினும், இன்னொரு சீசனில் ரியோ ராஜ்ஜு ம் நடித்திருப்பர். இந்த இரண்டு சீசன்களுமே அன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரிய ஹிட் அடித்தது. 


மேலும் படிக்க | யோகி பாபு நடித்துள்ள தூக்குதுரை திரைப்படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!


திருமண முறிவு..!


நடிகை ரச்சிதா, தன்னுடன் முதல் தமிழ் சீரியலில் ஜோடியாக சேர்ந்து நடித்த தினேஷை காதலித்து 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் உறவில் கடந்த 2021ஆம் ஆண்டு விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள் இருவரும் பிரிந்து வாழ தொடங்கினர். இந்த நிலையில், 2022ஆம் ஆண்டு நடைப்பெற்ற பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக பங்கேற்றார் ரச்சிதா. அப்போது, இவரது திருமணம் முறிந்ததற்கு காரணம் இவராகத்தான் இருப்பார் என பலர் பலவாறாக பேசினர். இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு நடைப்பெற்ற பிக்பாஸ் சீசன் 7ல் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்தார், தினேஷ். இந்த டைட்டிலை வென்றால், தான் ரச்சிதாவை போய் சந்திப்பேன் என்பதை ஜாடை மாடையாக கூறினார். ஆனால் இதை ரச்சிதா கண்டு கொள்ளவே இல்லை. 


இரண்டாவது திருமணமா? 


ரச்சிதாவிற்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக சில நாட்களாக இணையத்தில் வதந்திகள் பரவி வருகின்றன. இவர், கன்னட மொழி இயக்குநர் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவருடன் விரைவில் இல்வாழ்க்கையில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இதற்கு ரச்சிதாவோ, அல்லது அவர் தரப்பை சேர்ந்தவர்களோ தலையசைக்கவில்லை. அதனால் இவை தற்போது வரை வெறும் வதந்திகளாகவே உள்ளன. இந்த நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறிய தினேஷிடம் ஒரு நேர்காணலில் ரச்சிதா குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அவர், தனக்கென்று ஒரு சுவரை கட்டிக்கொண்டு அதில் அவர் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், தன்னால் உடைக்க முடியாத அளவிற்கு அந்த சுவர் நாளுக்கு நாள் வலுவாகிக்கொண்டே போவதாகவும் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | சின்னத்திரை நடிகரை கரம் பிடித்த ‘சாட்டை’ பட நாயகி! ரசிகர்கள் வாழ்த்து..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ