Naga Chaitanya Sobhita Dhulipala Engagement Latest News : நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் சோபிதாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றிருக்கிறது. இந்த நிலையில் சமந்தாவும் சோபிதாவும் உறவினர்கள் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாக சைதன்யா-சோபிதா நிச்சயதார்த்தம்:


தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர், நாக சைதன்யா. நடிகர் நாகார்ஜுனாவின் மகனான இவர், அவரது முதல் மனைவியான லக்ஷமிக்கு பிறந்தவர். நடிகர் நாகார்ஜுனா, சமந்தாவை 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதை அடுத்து, 2021ஆம் ஆண்டே விவாகரத்து வாங்கிக்கொண்டார். இந்த நிலையில், இந்தி நடிகை சோபிதா துலிபலாவிற்கும் இவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்று இருக்கிறது. 


ஆகஸ்ட் 8ஆம் தேதியான நேற்று, நாக சைதன்யாவின் இல்லத்தில், காலை 9:42 மணியளவில் இந்த திருமண நிச்சயதார்த்தமானது நடைப்பெற்று முடிவடைந்திருக்கிறது. இது குறித்த பதிவை பகிர்ந்த நாகார்ஜுனா, சோபிதாவை தங்களது குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி கொள்வதாக தெரிவித்து ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். 


சமந்தாவின் உறவினரா? 


சாேபிதா-நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம் முடிவடைந்திருக்கும் நிலையில், இவர்கள் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், நடிகை சோபிதாவும் சமந்தாவும் உறவினர்கள் என கூறப்பட்டு வந்தது. சற்று உற்று நோக்கிய போதுதான் தெரிந்தது, சோபிதாவின் சகோதரி பெயரும் சமந்தாதான் என்று. இதை பார்த்த பலர், நடிகை சமந்தாவுடன் இதை சேர்த்து குழப்பிக்கொண்டனர். 



ரசிகர்கள் விமர்சனம்..


நடிகை சமந்தாவிற்கும் நாக சைதன்யாவிற்கும் நடந்தது, காதல் திருமணம் ஆகும். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் சந்தித்து கொண்ட இருவரும் சில ஆண்டுகள் நண்பர்களாக பழகினர். இடையில் இருவருக்கும் வெவ்வேறு காதல்களும் வந்து கடந்து சென்றன. இந்த நிலையில்தான், ஒரு கட்டத்தில் இருவருமே காதலிக்க தொடங்கினர். இவர்களின்  திருமணமும் கோலாகலமாக நடைப்பெற்றது. சமந்தா தனது அனைத்து பற்களும் தெரியமளவிற்கு சிரித்து மகிழ்ந்ததையும் அப்போது பார்க்க முடிந்தது. ஆனால், சில மாதங்களிலேயே நிலைமை தலைகீழாக மாறியது. சமந்தாவின் திருமண வாழ்க்கையில் புயல் வீச, 2021ஆம் ஆண்டில் இருவரும் பரஸ்பர விவாகரத்தை பெற்று கொண்டனர். 


மேலும் படிக்க | சமந்தா-நாக சைதன்யா பிரிவிற்கு காரணம் என்ன? பல நாள் கழித்து மனம் திறந்த சமந்தா!


விவாகரத்திற்கு பின்பு இருவருமே ஒருவரை பற்றி ஒருவர் இழிவாக பேசவில்லை. சர்ச்சை, சண்டை என எதுவும் நடக்கவில்லை. ஒருவருக்கொருவர் மனமுவந்து விவாகரத்து பெற்றிருந்தாலும், சமந்தா முன்பு இருந்தது போல மகிழ்ச்சியாக இல்லை என்பது ரசிகர்கள் பலரது கருத்தாக இருந்தது. இப்போது புதிதாக ஒருவரை நாக சைதன்யா திருமணம் செய்ய இருப்பது, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், சமந்தா தான் அடுத்து திருமணம் செய்வது குறித்தோ, இன்னொரு ஆண்மகனை தன் வாழ்வில் நுழைப்பது குறித்தோ எங்குமே பேசவில்லை. இதனால், நாக சைதன்யாவை பலரும் விமர்சனம் செய்த வண்ணம் இருக்கின்றனர். சோபிதாவும் நாக சைதன்யாவும் காதலித்து வருவதாக 2022ஆம் ஆண்டில் இருந்தே தகவல்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. 


சிட்டல் தொடரின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கும் நடிகை சமந்தா, சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் கமெண்ட் செய்யும் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தும், நாக சைதன்யா மீது வெறுப்பை உமிழ்ந்தும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட நடிகர்களே அமைதியாக இருக்கும் போது, ரசிகர்கள் இப்படி டாக்ஸிக் ஆக இருப்பது காண்போருக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது. 


மேலும் படிக்க | நாக சைதன்யா-சோபிதா நிச்சயதார்த்த புகைப்படங்கள்!! நாகார்ஜுனாவின் ஸ்பெஷல் மெசஜ்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ