ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தவமாய் தவமிருந்து. இந்த சீரியலில் இன்றைய கடந்த வாரம் மார்க் தன்னுடைய மகள் மலர் மற்றும் பாண்டியை ஒன்று சேர்க்க திட்டம் போட்டு இருந்த நிலையில் இந்த வாரம் நடக்கப்போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது பாண்டி மார்க்கிடம் இந்த முறை மலர் ஹோட்டலை திறக்கட்டும் என சொல்கிறான். மலர் ஹோட்டலை திறக்க போக ஓனர் மகன் பாண்டியை கத்தியால் குத்த வர, மலர் கத்தியை பிடித்து தடுக்க அவளுக்கு கையில் காயம் ஏற்படுகிறது. அதன் பிறகு அனைவரும் அவனை அடித்து துரத்துகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Thalaivar 170: இத்தனை கோடி கொடுத்தும் ரஜினியுடன் நடிக்க மறுக்கும் விக்ரம்..இதுதான் காரணமா..?



பின்னர் மலர் சின்னதாய், லோகுவிடம் மன்னிப்பு கேட்க பாண்டி மற்றும் மலர் ஒன்று சேர்கின்றனர். அதனை தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பாண்டி வேலை விஷயமாக வெளியே போக, மலர் சாப்பிட முடியாமல் தவிக்க அப்போது அங்கு வரும் மார்க் மலருக்கு ஊட்டி விடுகிறார்.  பிறகு டாக்டர் பிரியாவுக்கு கருவில் பிரச்சனை குழந்தையை கலைக்காவிட்டால் பிரியா உயிருக்கு ஆபத்து என்று அதிர்ச்சி கொடுக்க மார்க் பிரியாவிடம் குழந்தையை கலைக்க சொல்ல, உங்கே நியாயம் தர்மம் விட நான் ரவி மீது வைத்திருக்கும் காதல் தான் முக்கியம், இந்த குழந்தையை நான் கலைக்க மாட்டேன் என சொல்கிறாள். 



அதோடு ரேவதி பாண்டியிடம் மலர் ஏரியா பஞ்சாயத்தில் உங்க குடும்பத்தை அசிங்க படுத்தியவள் என்று சொல்லி பழசை நியாபகப்படுத்தி இருவரையும் பிரிக்க சதி செய்கிறாள். மறுபக்கம் ராஜா மலரை ஏத்தி விட மலர், பாண்டி இடையே சண்டை வர பின் பாண்டி மலர் கழுத்தில் தாலி கட்டுகிறான். அதை தொடர்ந்து ரேவதி மார்கிடம் சண்டை போட்டு குழந்தைகளை தங்கராஜுடன் அனுப்ப அவன் ஒரு இடத்தில் குழந்தைகளை காத்திருக்க சொல்லி விட்டு தண்ணி அடிக்க செல்கிறான். இந்த சமயத்தில் குழந்தைகள் கடத்தப்பட தங்கராஜ் குழந்தைகள் இல்லாமல் வீட்டிற்கு வர, அனைவரும் பதறுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதை களம் நகர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


மேலும் படிக்க | Veerapandiya Kattabomman: “வரி வட்டி கிஸ்தி..” 64 ஆண்டுகளை கடந்தும் அழியாத காவியமாய் வீரபாண்டிய கட்டபொம்மன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ