தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி ஒவ்வொரு வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று பிக் பாஸ் (Bigg Boss Tamil) வீட்டில் இருந்து ஒரு நபர் வெளியேற்றப்படுவார். அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் ராஜு (Raju), இமான் அண்ணாச்சி, சிபி, பாவனி ரெட்டி, அக்ஷரா, அபினை, மதுமிதா (Madhumitha) உள்ளனர். இவர்களுள் மக்கள் குறைந்த வாக்குகளை யாருக்கு அளிக்கிறார்களோ அவர்கள் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவார்கள்.


ALSO READ | Biggboss 5: பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை நமீதாவின் கண்ணீரும், கலைஞர் கருணாநிதியும்


இதில் நேற்று முன்தினம் பிக் பாஸ் வீட்டில் ஒரு விருது விழா நடத்தப்பட்டது. அதில் ராஜூவுக்கு முதலில் Best entertainer என பட்டம்கொடுத்தனர். அதேசமயம் அவர் ஓப்பனாக பேசுவதில்லை என சொல்லி தலையில் தண்ணீர் ஊற்றி தண்டனையும் கொடுத்தார்கள். ஆனால் வெளியில் ரசிகர்கள் நினைப்பது வேறு என சொல்லி கமல் முதல் ஆளாக அவரை காப்பாற்றி இருகிறார். அது மற்ற போட்டியாளர்களுக்கு பெரிய நோஸ்கட் ஆக இருந்திருக்கும். 



ஜெர்மனியை சேர்ந்த மாடல் அழகி இவர், தனது கொஞ்சும் தமிழால் பிக்பாஸ் ரசிகர்களை கொள்ளை அடித்தார். அனால் மதுமிதாவால் சுவாரஸ்யம் நிறைந்த போட்டியாளராக மாற முடியவில்லை. இதன் காரணமாக இந்த வாரம் மதுமிதா தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட உள்ளார்.


ALSO READ | பிக்பாஸ் ஐந்தாம் சீசனின் போட்டியாளர்களின் புகைப்படத் தொகுப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR