சதிஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டில் வெளியான 'பேச்சிலர்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான திவ்யாபாரதிக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.  நடிகை திவ்யபாரதி இந்த ஒரு படத்தில் நடித்தே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திரும்பிவிட்டார் என்றே தான் சொல்லமுடியும்.  ரசிகர்கள் பலரும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே தான் குடிகொண்டு இருக்கின்றனர், அந்த அளவிற்கு இவருக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.  கண்ணைக்கூசும் அளவிற்கு நெருக்கமான காட்சிகளும், சில இரட்டை அர்த்த வசனங்களும் இந்த படத்தில் இடம்பெற்றிருந்தாலும் இப்படம் ஒரு சிறந்த கருத்தை கூறும் படமாக அமைந்திருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டிற்கு இவ்வளவு படங்கள் ரிலீசா?



'பேச்சிலர்' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதில் திவ்யபாரதிக்கு பதில் முன்னர் ஒப்பந்தமான நடிகை யார் என்பது பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.  சின்னத்திரை மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகை வாணி போஜன் தான் பேச்சிலர் படத்தில் திவ்யபாரதிக்கு பதிலாக நடிக்க இருந்ததாக அவரே சமீபத்திய பேட்டியொன்றில் கூறியுள்ளார்.  சமீபத்திய பேட்டியொன்றில் கலந்துகொண்ட வாணி போஜனிடம் இந்த படத்தின் வாய்ப்பை நாம் தவறவிட்டுவிட்டோமே என நீங்கள் நினைத்த படங்கள் உண்டா? என்று கேட்கப்பட்டது.  அதற்கு பதிலளித்தவர் பேச்சிலர் படத்தில் முதலில் நடிக்க வேண்டியது நான் தான், இயக்குனர் முதலில் என்னை தான் தொடர்புகொண்டு கேட்டார்.  இந்த திட்டத்தில் கையெழுத்து போடப்போகும் நேரத்தில் நான் இந்த படம் வேண்டாம் என்று விலகிவிட்டேன்.  ஏனென்றால் படத்தில் நெருக்கமான காட்சிகள் அதிகம் இருக்கிறது, இதில் நடித்தால் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா என்று யோசித்து தான் இந்த பட வாய்ப்பை வேண்டாம் என்று கூறினேன் என்று கூறியுள்ளார்.



மேலும் பேசியவர், பேச்சிலர் படத்தில் இடம்பெற்ற 'அடியே' பாடல் ஹிட் ஆன போது எனக்கு இந்த படத்தில் நடித்திருக்கலாம் என்று தோன்றியது.  படத்தில் ஒப்பந்தமான பிறகு நெருக்கமான காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று கூறினால் எனக்காக அவர்கள் கதையில் நிறைய மாற்றங்களை கொண்டுவர வேண்டியிருக்கும் என்பதாலும் படத்திலிருந்து விலக முடிவு செய்தேன்.  நான் இந்த வாய்ப்பை தவறவிட்டதற்காக இயக்குனர் என்னுடன் சண்டையும் போட்டார் என்று கூறியுள்ளார்.  மேலும் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் நடிக்க தனக்கு அழைப்பு வந்ததாகவும், அப்போது அவர் விமான பணிப்பெண்ணாக இருந்ததால் அந்த வாய்ப்பை தவறவிட்டுவிடதாகவும் கூறினார்.


மேலும் படிக்க | ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஒரு படத்துக்கே இவ்வளவு சம்பளமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ