Veera TV Serial In Tamil: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘வீரா’ சீரியல். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இந்த சீரியலின் செப்டம்பர் 23ம் தேதி எபிசோட் இது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் வீரா கண்மணியை எதிர்த்து கிச்சனில் சமைக்க ராமசந்திரன் கோபப்பட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 



அதாவது, ராமசந்திரன் உன்னை தான் இந்த வீட்டில் எந்த வேலையும் செய்ய கூடாதுனு சொல்லி இருக்கேன்ல, அப்படி இருக்கும் போது எதுக்கு கிச்சனுக்குள் வந்த என்று கோபப்பட வீரா இவ்வளவு பெரிய வீட்டில் எப்பவும் கிச்சனும் பூஜையறையும் ஒண்ணு தான் இருக்கணும். அது தான் குடும்பத்திற்கு அழகு.


நீங்க இங்க சமைத்து சாப்பிட கூடாதுனு சொன்னா நானும் மாறனும் சாப்பிடாமல் பட்டினியாக தான் இருப்போம். அப்படி இல்லனா வெளியில் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் ஒரு காலமும் தனியா சமைத்து சாப்பிட மாட்டோம் என்று சொல்ல ராமச்சந்திரன் பதில் பேச முடியாமல் செல்கிறார். 


மேலும் | வேள் பாரி காட்சிகள் திருட்டு... கங்குவாவா... தேவாராவா... எந்த படத்தை சொல்கிறார் இயக்குநர் ஷங்கர்?


அதை தொடர்ந்து வீராவும் மாறனும் கிளம்பி கடைக்கு வருகின்றனர். கல்யாணத்திற்கு பிறகு முதல் முறையாக கடைக்கு வருவதால் கோலாகல வரவேற்பு கொடுத்து வரவேற்கின்றனர். அப்பா சொன்ன வார்த்தையை மீறி வீராவிடம் பேச கூடாது என்பதால் அக்கவுண்டில் டவுட் இருந்தும் அதை கேட்க முடியாமல் தவிக்கின்றனர் ராகவனும் கார்த்தியும். 


இவர்களுக்கு ஏற்றார் போல வீராவும் அவர்களாக வந்து பேசும் வரை நாமளும் பேச கூடாது என்று முடிவெடுக்கிறாள். இதை பார்த்த மாறன் இவர்களை எப்படியாவது வீராவிடம் பேச வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு போன் செய்து ராமசந்திரன் குரலில் சேல்ஸ் டீடெயில்ஸ் வேணும் என்று கேட்க ராகவன் வீராவிடம் பேசி விடுகிறான். 


அடுத்து கண்மணி ராகவனுக்கு போன் செய்து கடையில் மாறனையும் வீராவையும் தொழிலாளி போலவே நடத்துங்க, மாமா பேச்சை நாம மீற கூடாது என்று கொளுத்தி போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வீரா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ஆவலாக இருக்கிறதா? வீரா சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | ஒரே சிக்னலில் தீபா, கார்த்திக், தூங்கா! யார் யாரைப் பார்ப்பார்கள்? த்ரில்லிங் எபிசோட்! டோண்ட் மிஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ