ஒரே சிக்னலில் தீபா, கார்த்திக், தூங்கா! யார் யாரைப் பார்ப்பார்கள்? த்ரில்லிங் எபிசோட்! டோண்ட் மிஸ்!

Karthigai Deepam Latest Episode: கார்த்திக்கு வரும் புது சிக்கல்.. சென்னை வந்த ரியல் தீபா, நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 13, 2024, 11:39 AM IST
  • கழுத்தில் இருக்கும் தாலியை கழற்றிய தீபா
  • சென்னை வந்த ரியல் தீபா
  • ஒரே சிக்னலில் தீபா கார்த்திக் தூங்கா
ஒரே சிக்னலில் தீபா, கார்த்திக், தூங்கா! யார் யாரைப் பார்ப்பார்கள்? த்ரில்லிங் எபிசோட்! டோண்ட் மிஸ்! title=

Tamil Serial Karthigai Deepam Today (12.9.2024) Episode: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இந்த கார்த்திகை தீபம் சீரியலின் செப்டம்பர் 12ம் தேதி எபிசோட் இது.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலான கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில் தீபா உயிருடன் இருப்பது தெரிய வந்தது. அந்த காட்சி பல ரசிகர்களின் மனதிலும் அடுத்து என்ன என்ற ஆவலைத் தூண்டியது. எனவே, இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

 கீதாவை பரிசோதனை செய்த டாக்டர் சென்னையில் கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலில் கொண்டு போய் சேர்க்க சொல்கிறார். அந்த பெண்மணியும் தீபாவை ஹாஸ்பிடலில் சேர்க்க முடிவெடுக்கிறாள். தீபா கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டி சாமி வேண்டி கொண்டு பூஜை அறையில் வைத்து விடுகிறாள். 

மேலும் படிக்க | கார்த்திகை தீபம் சீரியல்: உயிருடன் இருக்கும் தீபா.. உண்மையை உடைத்த கீதா, கார்த்தி ஷாக்

இதை தொடர்ந்து வீட்டில் தீபாவின் நினைவுகளால் கவலைப்பட்டு கொண்டிருக்கிறான் கார்த்திக். திடீரென  தூக்கத்தில் இருந்து எழுந்த கீதா, என்ன கார்த்திக் தீபாவை மிஸ் பண்றீங்களா என்று கேட்க அவனும் ஆமாம் தீபா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கவலையுடன் சொல்கிறான். 

அதன் பிறகு கர்நாடகாவில் மிஸ்டர் தூங்கா, போலீசை கூப்பிட்டு ஒரு பொண்ணை போய் தப்பிக்க விட்டு இருக்கீங்க, எனக்கு அந்த கீதா கிடைத்தாகணும் என்று சத்தம் போடுகிறார். போலிஸ் கீதா சென்னையை விட்டு எங்கேயும் போய் இருக்க முடியாது, கூடிய சீக்கிரம் கண்டு பிடித்து விடுவோம் என்று சொல்கிறார்கள்.

அடுத்த நாள் தூங்கா சென்னை கிளம்பி வருகிறார். தீபாவை அந்த பெண்மணி ஆட்டோவில் சென்னைக்கு அழைத்து வருகிறார். இன்னொரு பக்கம் கார்த்திக்கும் வெளியே கிளம்பி வருகிறான். தற்போது, தூங்கா, தீபா மற்றும் கார்த்தி என மூவரும் ஒரே சிக்னலில் நிற்கின்றனர், ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளவில்லை. இந்த த்ரில்லிங்கான காட்சிகள் இன்றைய எபிசோடில் இரம் பெறவிருக்கின்றன. பரபரப்பான கட்டத்தில் இருக்கும் கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?

கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் 10 பிரபலமான தமிழ் நடிகைகள் இவங்க தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News