ஆஸ்கர் பிரச்சனைக்குப் பிறகு வில் ஸ்மித் முதல்முறையாக வெளியே வந்துள்ளார். அதுவும் அவர் மும்பைக்கு வந்துள்ளது தற்போது கவனம் பெற்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வில் ஸ்மித் பலமுறை இந்தியா வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாரணாசி வந்த அவர், கங்கை நதியில் புனித நீராடினார். அதோடு சாமியார்களையும் சந்தித்துச் சென்றார்.



மேலும் படிக்க | இரண்டாவது திருமணத்திற்கு ரெடியான நாக சைதன்யா! மணப்பெண் யார்


கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் தொகுப்பாளர் கிரிஸ் ராக்கை விழா மேடையிலேயே வில் ஸ்மித் அடித்தார். அவரது மனைவியை கிண்டல் செய்ததால் அவ்வாறு செய்ததாகவும், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார். இருந்த போதும் அவர் மீது ஆஸ்கர் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. 


 



அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர் ஆஸ்கர் அகாடமி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது. அதோடு ரீலீசுக்காக காத்திருக்கும் வில் ஸ்மித் படங்கள் கிடப்பில் போடப்பட்டன. இப்படி பல சிக்கல்களுக்கு நடுவே, வில் ஸ்மித் முதல்முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியா வந்துள்ள அவரை மும்பை விமான நிலையத்தில் அவரது ரசிகர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அதோடு அவரை வீடியோவும் எடுத்துள்ளனர். 


மேலும் படிக்க | தமிழ் சினிமாவில் களமிறங்க இருக்கும் புதிய வாரிசு நடிகர்


இந்த முறையும் அவர் வாரணாசி செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதோடு மத குருக்களையும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய பாரம்பரியத்தின் மீது அதீத பிரியம் கொண்ட வில் ஸ்மித் மன நிம்மதிக்காக இங்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR