தமிழ் சினிமாவில் களமிறங்க இருக்கும் புதிய வாரிசு நடிகர்

நடிகர் சூர்யாவின் மகன் தேவ், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகப்போகும் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Apr 22, 2022, 01:37 PM IST
  • நடிகர் சூர்யாவிற்கு தேவ், தியா என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
  • தேவ் விரைவில் நடிகராக களமிறங்க உள்ளார்.
  • பிரதீப் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் களமிறங்க இருக்கும் புதிய வாரிசு நடிகர் title=

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் சூர்யாவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் நிறைந்துள்ளது.  நடிகர் சிவகுமாரை தொடர்ந்து அவரின் வாரிசுகளான நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி ஆகிய இருவரும் திரையுலகில் ஒரு கலக்கு கலக்கி வருகின்றனர்.  வாழையடி வாழையாய் என்பது போல இவர்களது வரிசையில் தற்போது நடிகர் சூர்யாவின் மகன் தேவ் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.  இவ்வாறு செய்திகள் எழுந்ததற்கு காரணம் ஒரு புகைப்படம் தான், இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுடன் சூர்யாவின் மகன் தேவ்வும் மற்றொரு சிறுவனும் இருக்கும்படியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானதில் இருந்து இதுகுறித்த சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

suriya

மேலும் படிக்க | விஜய்க்காக காத்திருக்கும் பிரபல இயக்குநர்

அந்த வைரலாக புகைப்படத்தில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தேவ் மற்றும் மற்றொரு சிறுவனிடம் அவர்கள் நடிக்கப்போகும் காட்சியை பற்றி விளக்குவது போன்று அமைந்துள்ளது.  வெளியான தகவல்களின்படி, சூர்யாவின் மகனான தேவ், இயக்குனர் பிரதீப் இயக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.  இருப்பினும் இப்படத்தின் தலைப்போ அல்லது படம் பற்றிய வேறு எவ்வித தகவலுமோ அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  ஆனால் இப்படம் உருவானால் அதில் தேவ் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

dev

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகனான தேவ் சிறு வயதிலேயே திரைத்துறைக்குள் நுழைய போகிறார், இவர் நடிப்பு எப்படி இருக்கும் என்கிற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.  சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் கதையை வெறும் 11 வயதே ஆன தனது மகன் தேவ் தெளிவாக புரிந்துகொண்டதாக நடிகர் சூர்யா தெரிவித்திருந்தார்.  இந்த இளம் வயதில் ஒரு சமூக அவலங்களை எடுத்துரைக்கும் படத்தின் கதையை புரிந்துகொண்டவர், நிச்சயம் தனது மேம்பட்ட நடிப்புத்திறனை வெளிப்படுத்துவார் என்று நம்பப்படுகிறது. சமீபத்தில் சூர்யாவின் 2டி எண்டெர்டைன்மெண்ட் தயாரிப்பில் வெளியான ஓ மை டாக் படத்தில் அருண் விஜய் மகனை சூர்யா அறிமுகப்படுத்தி இருந்தார்.

மேலும் படிக்க | சமூக வலைத்தளத்தை விட்டு விலகும் பிரபல நடிகர்! காரணம் இதான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News