பிரபல யூடியூபரும் பிக் பாஸ் வெற்றியாளருமான எல்விஷ் யாதவ்  மற்றும் அவரது 5 நண்பர்கள் மீது நொய்டா காவல்துறை வழக்கு பாதித்துள்ளது. அவரின் கூட்டாளிகனா ராகுல், தித்துநாத், ஜெயகரன், நாராயண் மற்றும் ரவிநாத் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் எல்விஷ் யாதவ் ரேவ் பார்ட்டிகளை ஏற்பாடு நடத்தியதாகவும், இதில் வெளிநாட்டுப் பெண்கள் அழைக்கப்பட்டதாகவும், அந்த பார்ட்டியில் பாம்பு விஷம் மற்றும் போதைப்பொருட்களை பயன்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | Bigg Boss Tamil: வைல்டு கார்டில் என்ட்ரி கொடுத்த தினேஷ்! யார் இவர்?



கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் தடை செய்யப்பட்ட ஒன்பது விஷப் பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து 20 மில்லி பாம்பு விஷம், 9 விஷ பாம்புகள்  (5 நாகப்பாம்பு, 1 மலைப்பாம்பு, 1 இரு தலை பாம்பு, 1 எலி பாம்பு) கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் ரேவ் பார்ட்டிகளின் போது இவர்கள் பாம்பு மற்றும் பாம்பு விஷத்தைப் பயன்படுத்தியதாகவும் போலீசார் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள எல்விஷ் யாதவ் பாஜக ஆதரவாளர் என்று கூறப்படும் நிலையில் அதே கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மேனகா காந்தியின் தொண்டு நிறுவனம் தான் இவர்களை பின்தொடர்ந்து  போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.


மேலும் படிக்க | பிக்பாஸ் 7: காதல் ஜோடியை பிரித்த பார்வையாளர்கள்! இந்த வாரம் எவிக்ட் ஆவப்போவது யார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ