மறுபிறவினு ஒண்ணு இருந்தா கலைஞர் குடும்பத்தில பிறக்கணும் - செல்லூர் ராஜூ

மதுரையில் பேசிய செல்லூர் ராஜூ, மறுபிறவி என ஒன்று இருந்தால் கலைஞர் குடும்பத்தில் பிறக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 22, 2024, 11:13 AM IST
  • மறுபிறவியில் கலைஞர் குடும்பத்தில் பிறக்க ஆசை
  • அவர்கள் மகன், பேரன் போல் வாழ விரும்புகிறேன்
  • மதுரை பொதுக்கூட்டத்தில் செல்லூர் ராஜூ பேச்சு
மறுபிறவினு ஒண்ணு இருந்தா கலைஞர் குடும்பத்தில பிறக்கணும் - செல்லூர் ராஜூ title=

மதுரை அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்று உரையாற்றினார். அப்போது, பொதுக்கூட்டத்தில் யாராவது எழுந்து சென்றால் பழங்காலத்தில் குடு குடுப்பைகாரர்கள் சொல்வதுபோல ரத்தம் காக்கி சாவிங்க என கூறி கலகலவென்று பேசினார். தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, எடப்பாடியாரின் ஆட்சியில் சிறந்த வளர்ச்சிகளை கொடுத்த எங்களது தம்பி SP வேலுமணியை பொய் வழக்கு போடுகிறார்கள்.

நாங்கள் பணங்காட்டு நரி, சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். நீ ஒரு பொம்மை முதல்வர். வாக்கு அளித்தவருக்கு துரோகம் செய்யும் ஒரே கட்சி திமுக தான். நாங்கள் ஆட்சி வந்த பிறகு ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் கூறினார். உங்க ஆட்சியில் முதல் வருடத்தில் 25 பேர் இறந்தார்கள், இந்தாண்டு கள்ளச்சாராயம் குடித்து 70 பேர் உயிரிழப்பு. மது ஒழிப்பு மாநாடு ஒரு கண்துடைப்பு, தமிழ்நாட்டில் பாலாறும், தேனாறுமா ஓடுது. திமுக கூட்டணி கட்சியினர் கூறி வருகிறார்கள் எங்களது கூட்டணியில் பிளவு வராதா என அதிமுக ஏங்கி கொண்டு இருக்கிறது, வயிற்று எரிச்சல் என்று. ஏய் யாருக்கு வயிற்று எரிச்சல்?, தமிழ்நாட்டு மக்களுக்கு வாய்ப்பு வரும்போது வச்சு செய்வார்கள், அவர்களுக்கு வாய்ப்பு 2026ல் வரும் அப்போது வச்சு செய்வார்கள்.

மேலும் படிக்க | ஓபிஎஸ், வைத்திலிங்கம் ஒருபோதும் அதிமுகவில் சேர்க்கப்படமாட்டார்கள் - எடப்பாடி பழனிசாமி

லஞ்சம் கொடுத்ததாக தயாளு அம்மாவிடம் சோதனை நடத்தியபோது, அண்ணா அறிவாலயத்தில் நீங்கள் கூட்டணிக்கு பேசியவர்கள் தானே நீங்கள். நீங்கள் எங்க அம்மா மீது வழக்கு தொடுத்தீர்கள், எங்கம்மாவின் ஆன்மா உங்களை சும்மா விடாது. கலைஞர் ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தும், துணை முதல்வராக இருந்தும் எத்தனை முறை பதவியில் இருந்தாலும், உங்க அண்ணனுக்கு பயந்து மதுரைக்கு வர முடிந்ததா?. அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்று அங்கு சைக்கிள் ஓட்டுகிறார், ஜிம்முக்கு போறார். 

மறுபிறவி இருந்தால் கலைஞர் குடும்பத்துல தான் பிறக்கணும், மகனாகவோ, பேரனாகவோ என்னமா வாழ்ராய்ங்க. அம்மாவிற்கு குடும்பம் இல்லை. ஆனால் உறவுகள் இருந்தது. யாருக்கும் பதவி வழங்கவில்லை. அதே போல் தான் எடப்பாடிக்கும் குடும்பம் உள்ளது, மகன் உள்ளார். ஆனால், யாருக்கும் பதவி வழங்கவில்லை இதுதான் அதிமுக. வருங்கால சந்ததியினரை வாழவைக்கும் ஒரே இயக்கம் அதிமுக" என பேசினார்.

மேலும் படிக்க | பழனி பஞ்சாமிர்தம் தூய்மையாக உள்ளதா...? சேகர் பாபுவுக்கு தமிழிசை கேள்வி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News