அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அமுதா வீட்டிற்கு வர, அன்னலட்சுமி ஏதாவது தகவல் கிடைச்சுச்சா என கேக்க, மாயா சொன்ன அந்த நாளில் கல்யாணம் நடந்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும், செந்திலின் கையெழுத்து, போட்டோ முதலியன சரியாக இருப்பதாக சொல்கிறாள். இவை அனைத்தையும் மாயா ஒட்டு கேட்டுக் கொண்டிருக்கிறாள். 


மேலும் படிக்க | விடாமுயற்சி படப்பிடிப்பு இந்த தேதியில் தொடங்குகிறது.. வெளியானது ருசிகர தகவல்


பிறகு.அமுதா போன இடத்துல ஆதாரம் கிடைக்கலை, ஆனா அந்த முகம் தெரியாத நபரை கண்டுபிடிச்சிட்டா இவ எதுக்காக இப்படி பண்ணுனான்னு கண்டுபிடிச்சிரலாம் என் சொல்ல மாயா தனியாக வந்து அமுதா மட்டும் விக்னேஷை கண்டுபிடிச்சிட்டா நம்ம உண்மை எல்லாம் வெளிவந்துரும் என புலம்புகிறாள். 


அடுத்ததாக மாணிக்கம் அன்னலட்சுமியிடம் ஜீ தமிழ்ல எல்லா சிரீயலயும் பார்க்குறியே இந்த மாயாவை விரட்டி அடிக்கிறதுக்கு ஒரு ஐடியா கிடைக்கலையா என கேட்க அன்னலட்சுமி யோசித்தபடி எண்ணெய் எண்ணெய் என சொல்ல, மாணிக்கம் எல்லா வில்லிகளும் யோசிக்கிற மாதிரி எண்ணெய்யா, பழசா இருந்தாலும் பக்காவா இருக்கும் போய் எடுத்துட்டு வா என சொல்கிறார். 


மாணிக்கமும்,அன்னமும் வீடு முழுவதும் எண்ணெய்யை ஊற்றி விட மாயாவும், உமாவும் வெளியே வர இருவரும் எண்ணெயில் வழுக்கி விழுகின்றனர். மாணிக்கமும் அன்னலட்சுமியும் இருவரும் மாயாவை நக்கல் செய்து கொண்டிருக்க, அமுதாவும் செந்திலும் வெளியே வர இருவரும் எண்ணெயில் வழுக்கியபடி கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து கொள்கின்றனர்.


பிறகு அமுதா சந்தோஷத்துடன் வெளியே வர, ஸ்கூல் ஹெ.எம்மோட பையன் வர்றாங்க இப்ப நம்ம ரெண்டு பேரையும் இங்க பார்த்தா மாட்டிக்க மாட்டாமோ என சொல்ல, அமுதா உள்ளே சென்று ஒளிந்து கொள்கிறாள். 


உமா மாயாவிடம் ரெண்டு பேரும் ஸ்கூல்ல கல்யாணம் ஆகலேன்னு டிராமா பண்ணிருக்காங்க அதான் இவனை பார்த்ததும் பயப்படுறாங்க என சொல்கிறாள். இதையடுத்து மாயா வந்திருந்த வாத்தியாரிடம் எனக்கும் செந்திலுக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு என சொல்ல செந்தில் தலை ஆட்டுகிறான். 


பிறகு செந்திலிடம் உடம்பு எல்லாம் சரியாயிடுச்சுல்ல நாளைக்கே வந்து வேலையில் ஜாயின் பண்ணுங்க என சொல்லிவிட்டு வாத்தியார் நகர, அமுதா வெளியே வர, வாத்தியார் திடீரென திரும்ப அமுதா மீண்டும் போய் ஒளிந்து கொள்கிறாள். வாத்தியார் செந்திலிடம் நம்ம ஸ்கூல்ல அமுதான்னு ஒரு பொண்ணு படிக்குதுல்ல அந்த பொண்ணும் இந்த ஊர் தான அவங்களும் ரொம்ப நாளா ஸ்கூலுக்கு வரலை, அவங்களையும் பார்த்துட்டு போலாம்னு நினைக்கிறேன் என சொல்கிறார். 


உடனே மாயா கூப்பிடுற தூரத்துல தான் அமுதா இருக்கா கூப்பிட்டா வந்துருவா, நாளைக்கு இவரே அமுதாவை ஸ்கூலுக்கு கூட்டிட்டு வந்துருவாரு என சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது


அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.


மேலும் படிக்க | தனுஷின் கேப்டன் மில்லர்.. வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய லைகா, டிசம்பர் 15 ரிலீஸ்


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ