மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் : தமிழ் தொலைக்காட்சிகளின் பிரபலமான தொடர்களுள் மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்குவது, மீனாட்சி பொண்ணுங்க. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்களின் மனங்களில் மிகவும் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. மங்கையர் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கருவாகும். தமிழ் ரசிகர்கள் பலரை கவர்ந்துள்ள மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சின்னத்திரை பிரபலங்களான மோக்‌ஷிதா பாய், ஸ்ரீரஞ்சினி ஆகியோர் நடித்துள்ளனர். இத்தொடர், தற்போது பல எதிர்பாராத விறுவிறுப்பான ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்டையில் சக்தியிடம் விவாகரத்து பேப்பரில் கையெழுத்து வாங்கிய வெற்றி நீதிமன்றத்திற்கு கிளம்பிச் சென்ற நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது,வீட்டுக்கு வரும் மீனாட்சி கோபமாகி சக்தியை அறைந்து உண்மை அனைத்தையும் சொல்கிறாள். தான் கலெக்டர் ஆக வேண்டும் என்பதற்காக வெற்றி செய்த தியாகம் சக்திக்கு தெரிய வருகிறது. 


இதையடுத்து வெற்றியை தடுத்து நிறுத்த சக்தி கோர்ட்டுக்கு ஸ்கூட்டியில் போகிறாள். வழியில் வண்டி ரிப்பேர் ஆகிவிட அங்கே வரும் நீதிமணி, வெற்றி குடித்ததாக நடித்ததையும் வேண்டுமென்றே சாந்தி முஹூர்த்தத்தை நிப்பாட்டியதையும் சொல்லி அவளை கோர்ட்டுக்கு கூட்டிக்கொண்டு போகிறாள்.


மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: சீதாவை பழி தீர்க்க மகா போடும் பிளான்.. ராம் எடுத்த அதிரடி முடிவு


பிறகு கோர்ட்டில் டைவர்ஸுக்கு அப்ளை செய்துவிட்டு வெற்றி வெளியே வரும்போது சக்தி அவனிடம் சண்டை போடுகிறாள். எப்படி நீ கோர்ட்டில் அப்ளை செய்யலாம் என்று கேள்வி கேட்க, அப்படியானால் நீ ஏன் கலெக்டருக்கு படிக்க மாட்டேன் என்று சொன்ன என்று வெற்றி கேட்க, ஒரு கட்டத்தில் கோபமாகும் சக்தி உனக்காக நான் கலெக்டருக்கு படிக்கிறேன், ஆனால் என்னை விட்டுப் பிரியக் கூடாது என்று சொல்ல, டைவர்ஸ் பேப்பரை எடுத்துக்காட்டி இதை இப்போதைக்கு அப்ளை செய்ய முடியாது என வக்கீல் சொல்லிவிட்டார் என்று உண்மையைச் சொல்கிறான் வெற்றி. பிறகு சக்தியும் வெற்றியும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொள்ள, மீனாட்சி சந்தோசமாகிறாள். 


அதை தொடர்ந்து அனைவரும் கோவிலுக்கு போகிறார்கள். சக்தி வெற்றியிடம் நீ என்னை புரிந்து கொண்டது சந்தோஷம் ஆனால் அனைவரின் முன்னாலும் என்னை திட்டக்கூடாது, எனக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது என்று சொல்ல, வெற்றி அதை புரிந்து கொள்கிறான்.


பின்னர் வெற்றியும் சக்தியும் வீட்டுக்கு வருகிறார்கள். வெற்றியும் சக்தியும் பிரிந்திருப்பார்கள் என்று கனவு கண்டு கொண்டிருக்கும் பூஜாவை கிண்டல் செய்து வெறுப்பேற்றுகிறார்கள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | Karthigai Deepam: உண்மையை சொல்ல முடிவெடுத்த மீனாட்சி.. ட்விஸ்ட் கொடுத்த தீபா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ