Karthigai Deepam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவை ரவுடி ஒருவன் கொல்ல வர அவள் காரில் மோதி விபத்துக்குள்ளான நிலையில் இன்று அடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்த்திகை தீபம் (Karthigai Deepam) : இன்றைய எபிசோட்


அதாவது, ஆனந்த் அருணை சந்தித்து ரம்யா கார்த்திக்கை லவ் பண்ணுவதாக சொல்ல அவன் உனக்கு யார் சொன்னது என்று கேட்க ஐஸ்வர்யா பெயரை சொன்னால் பிரச்சனை ஆகிடும் என்ற காரணத்தால் ஒருத்தர் மூலமாக விஷயம் தெரிய வந்தது, கன்பார்ம் தான் என்று சொல்கிறான். 


அடுத்து கார்த்திக் தீபாவை டாக்டரிடம் அழைத்து செல்ல அவர் பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல, நாளைக்கு திரும்பவும் ஹாஸ்பிடல் கூட்டிட்டு வாங்க, இப்போ நீங்க வீட்டிற்கு போகலாம் என்று அனுப்பி வைக்கின்றனர். அடுத்ததாக அருண் ஆனந்த ஆகியோர் ரம்யாவை ஆபிஸில் வைத்து சந்திக்கின்றனர். 


நான் அனுப்புன எம்பிளாயி எப்படி வேலை செய்யுறான்? என்று ஆனந்த் கேட்க ரொம்ப நடிக்காத அவன் உன் தம்பி தான் என்று எனக்கு தெரியும் என்று ஷாக் கொடுக்கிறாள் ரம்யா. பிறகு அவனை எதுக்கு என்கிட்டே வேலைக்கு அனுப்பின என்று கேட்க அவன் இண்டஸ்ட்ரி பத்தி தெரிஞ்சிக்கணும் அதுக்கு உன் கம்பெனி தான் சரியா இருக்கும்னு அனுப்பியதாக சொல்கிறான். பிறகு நீ கார்த்தியை லவ் பண்றியா என்று கேட்க ரம்யா இல்லை அவன் எனக்கு தொழிலாளி தான் என்று பொய் சொல்கிறாள். 


அருண், ஆனந்த் கார்த்திக்கு கல்யாணம் ஆகிடுச்சு என்ற விஷயம் தெரிந்தால் அவனை துரத்தி விடுவாள் என்று கணக்கு போட்டு உண்மையை சொல்ல ரம்யா எல்லாம் எனக்கு தெரியும், தீபா என்னுடைய தோழி தான்.. அவளுக்கு எப்படி நான் துரோகம் செய்வேன் என்று ஷாக் கொடுக்க இவர்கள் ஏமாற்றத்துடன் வெளியே வருகின்றனர். பிறகு ரம்யாவின் மனசாட்சி எதுக்கு பொய் சொன்ன? ஆமாம்னு உண்மையை சொல்ல வேண்டியது தானே என்று கேள்வி எழுப்ப உண்மையை சொல்ல இது சரியான நேரம் இல்லை என்று சொல்கிறாள்.


மேலும் படிக்க | கார்த்திகை தீபம் அப்டேட்: கத்தியுடன் தீபாவை குத்த துரத்தும் ரவுடி.. கார்த்திக்கிடம் அடுத்தடுத்து பல்பு வாங்கிய ரம்யா


மறுபக்கம் வீட்டிற்கு வந்த தீபா கார்த்திக்கிடம் எனக்கு நடந்தது ஆக்சிடென்ட் இல்ல, ஒரு ரவுடி தன்னை கொல்ல வந்ததாக உண்மையை உடைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?


கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | Vijay : தனது பெற்றோரை பல நாட்களுக்கு பிறகு சந்தித்த விஜய்! என்ன விஷயம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ