இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும்மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதன் காரணமாக அரிசி, பருப்பு, பால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்கள் விலை கிடுகிடு என உயர்ந்து மக்கள் வாழ்வதற்கே வழியில்லாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் காரணமாக இலங்கையில் ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பங் களை சேர்ந்த மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. இதனால் அங்கு இருக்கும் மக்கள் இலங்கையில் இருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர். முக்கியமாக இலங்கை தமிழர்கள் பலர் தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.


மேலும் படிக்க | மே தினம் விடுமுறை - 200 கோடி ரூபாய் வசூல் செய்த டாஸ்மாக்


இந்த நிலையில் ஆளும் அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் வீதியில் இறங்கி கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து இலங்கையில் வாழ வழியின்றி ஈழத்தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வருவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது.


இந்த நிலையில் ஏற்கனவே 21 குடும்பத்தை சேர்ந்த 75 பேர் வந்துள்ள நிலையில் தற்போது ராமேஸ்வரம் அடுத்த சேரான்கோட்டை கடற்கரை பகுதியில் 2 மாத கைக்குழந்தை மற்றும் ஒரு சிறுமி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 நபர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.


இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் கியூ பிரான்ச் போலீசார் ஆகியோர் அகதிகளாக வந்தவர்களிடம் உரிய விசாரணை நடத்துவதற்காக மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்களை அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.


முன்னதாக கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இலங்கை தமிழர்கள் 20 பேர் ராமேசுவரம் தனுஷ்கோடிக்கு வந்தனர். அவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மேலும் பலர் குடும்பம் குடும்பமாக வந்தபடி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | சாலைக்கு விவேக் பெயர்... அரசாணை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு ரசிகர்கள் நன்றி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR