மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்று முக்கிய அறிவிப்பு: அகவிலைப்படி உயர்வு கணக்கீடு இதோ

Thu, 03 Oct 2024-11:26 am,

மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் காத்திருப்பு தற்போது முடிவுக்கு வரவுள்ளது. இனி, எப்போது வேண்டுமானாலும், டிஏ உயர்வு பற்றிய அறிவிப்பு வரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று அமைச்சரவை கூட்டம் நடக்கவுள்ளதாகவும் அதில் டிஏ உயர்வுக்கான அறிவிப்பு வரக்கூடும் என்றும் கூறப்படுகின்றது.

7வது ஊதியக் குழு: எனினும், இது குறித்து இன்னும் அரசாங்கம் எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், அக்டோபர் முதல் வாரத்திலேயே இந்த அறிவிப்பு வந்து விடும் என ஊடக அறிக்கைகள் தெரிவிகின்றன. 

அக்டோபர் 3 ஆம் தேதி, அதாவது இன்று மத்திய அரசின் சிறப்பு அமைச்சரவை கூட்டம் (Cabinet Meeting) நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் டிஏ உயர்வு குறித்த முடிவு எடுக்கப்படலாம். இந்த முடிவுக்கு நீண்ட நாட்களாக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் காத்திருக்கிறார்கள்.

தீபாவளிக்கு முன்னதாக 3% முதல் 4% வரையிலான டிஏ உயர்வு (DA Hike) அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு அமல்படுத்தப்பட்டால், ஜூலை 1, 2024 முதல் அமலுக்கு வரும். இது ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும். இது தவிர, ஜூலை முதல் டிஏ அரியர் தொகையும் கிடைக்கும்.

மத்திய அரசு ஊழியர்களின் அகவலைப்படியும், ஓய்வூதியதாரர்களின் (Pensioners) அகவிலை நிவாரணமும், மூன்று சதவீதம் அதிகரிக்கப்பட்டால் அவர்களது மொத்த டிஏ (DA) மற்றும் டிஆர் (DR) 53 சதவீதமாக உயரும். அதேசமயம் அகவிலைப்படியும் அகவிலை நிவாரணமும் (Dearness Allowance) நான்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டால், மொத்த டிஏ (DA) மற்றும் டிஆர் (DR) 54 சதவீதமாக அதிகரிக்கும். உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை ஒன்று 2024 முதல் அமலில் இருக்கும். 

சம்பள உயர்வு கணக்கீடு: ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் (Basic Salary) 18,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அகவிலைப்படி 3% அதிகரித்தால் அவருக்கு சம்பளத்தில் ரூ.540 மாத அதிகரிப்பு இருக்கும். ஆண்டு அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும். 

சம்பள உயர்வு: அகவிலைப்படி 4% அதிகரித்தால், அவரது மாத சம்பளத்தில் 720 ரூபாய் அதிகரிப்பு இருக்கும். ஆண்டு சம்பளம் ரூ.7,440 அதிகரிக்கும்.

மாதச் சம்பளம் ரூ.50,000 உள்ள ஊழியர்களுக்கான கணக்கீட்டை காணலாம். அகவிலைப்படி 3% அதிகரித்தால், அவர்களுக்கு மாதா மாதம் சம்பளத்தில் ரூ.1,500 கூடுதலாக வரும். ஆண்டுக்கு இந்த உயர்வு ரூ.18,000 ஆக இருக்கும். இந்த தொகை பல்வேறு லெவல் ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.  

ஓய்வூதியதாரர்களின் மாத ஓய்வூதியத்திலும் நல்ல ஏற்றம் இருக்கும். ஓய்வூதியம் பெறுபவரின் அடிப்படை ஓய்வூதியம் ரூ.25,000 எனில், அவருக்கு 50 சதவீதத்தின்படி ரூ.12,500 அகவிலைப்படி வழங்கப்படும். அகவிலைப்படி 53% ஆக அதிகரித்தால், அவருக்கு ரூ.13,250 கிடைக்கும்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணவீக்கத்தை சமாளிக்க, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகின்றது. ஆண்டுக்கு இரு முறை இது திருத்தப்படுகின்றது. ஊழியர்களின் சம்பள கட்டமைப்பில் இது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகின்றது. 

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரண (DR) விகிதங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றப்படுகின்றன. இந்த மாற்றம் பணியாளர் அமைச்சகத்தால் வெளியிடப்படும் ஏஐசிபிஐ குறியீடு (AICPI Index) விகிதங்களின் அடிப்படையில் செய்யப்படுகின்றது. 

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link