இந்த பிரச்சனை இருந்தால் பால் அருந்தக்கூடாது, ஜாக்கிரதை!!

Wed, 30 Nov 2022-7:45 pm,

தொடர்ந்து பால் குடிப்பதால், உடல் பலவீனமும், சோர்வும் நீங்கும். இதனுடன், தூக்கமின்மை பிரச்சனைகளையும் இது நீக்குகிறது. இது தவிர பால் எண்ணற்ற நன்மைகளை கொண்டுள்ளது. ஆனால் சில சூழ்நிலைகளில் பால் உட்கொள்வது உடலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எந்தெந்த நபர்கள் பால் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும். இந்த நிலையில் பால் குடித்தால், அது பல பிரச்சனைகளை உண்டாக்கும். இது தவிர கல்லீரலில் வீக்கம் இருந்தாலும் பாலை தவிர்க்கவும். இது நார்த்திசுக்கட்டிகள் பிரச்சனைக்கு வழிவகுக்கும். நீங்கள் அதிகமாக பால் குடித்தால், அது ஒரு தீவிர நிலைக்கு உங்களை கொண்டு செலல்லாம். 

ஃபேட்டி லீவர் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பால் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த வகையான பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பால் செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படும். பாலில் புரதம் நிறைந்துள்ளது. இது ஃபேட்டி லீவர் பிரச்சனையை அதிகரிக்கும். இது அசிடிட்டி, அஜீரணம் போன்ற பிரச்சனைகளையும் அதிகரிக்கிறது.

பாலில் லாக்டோஸ் உள்ளது. இதன் காரணமாக உங்கள் செரிமானம் பாதிக்கப்படலாம். அளவுக்கு அதிகமாக பால் குடித்தால் வயிற்றுப்போக்கு, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதனால்தான் கேஸ் ஏற்பட்டால் பால் குடிக்க வேண்டாம் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link