ஏழரை நாட்டு சனி பாடாய் படுத்துகிறதா? இந்த பரிகாரங்கள் கை கொடுக்கும்

Fri, 11 Nov 2022-6:40 pm,

தற்போது தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் உள்ளது. மிதுனம் மற்றும் துலாம் ராசியில் சனி தசை உள்ளது. இந்த ராசிகள் சனி பகவானுக்கான சிறப்பு பரிகாரங்களை செய்ய வேண்டும். 

ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருக்கும் 5 ராசிக்காரர்கள் சனிக்கிழமையன்று சனி சாலிசாவை பாராயணம் செய்ய வேண்டும். இதனால் சனியின் அருள் கிடைக்கும்.

அனுமனின் பக்தர்களை சனி பகவான் படுத்துவதில்லை. சனிக்கிழமையன்று அனுமன் சாலிசாவை பாராயணம் செய்வது சனியின் தொல்லைகளிலிருந்து விடுபட ஒரு சிறந்த வழியாகும்.

 

ஜாதகத்தில் இருக்கும் சனி தோஷத்தைப் போக்க, சனிக்கிழமையன்று சனி கோவிலுக்குச் சென்று அரச மரத்திற்கு தூய தண்ணீரை அர்ப்பணித்து வழிபடவும். பின்னர் அங்கு விளக்கேற்றி பிரார்த்தனை செய்யவும்.

 

ஏழைகளுக்கு தானம் செய்வதும் இல்லாதவர்களுக்கு உதவி செய்வதும் சனி பகவானின் மனதை உருக வைக்கும். இதை தவறாமல் செய்து வரவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை  உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link