கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக உணவு விநியோகம் -முதல்வர் அறிவிப்பு
இன்று அனைத்து வழித்தடத்திலும் மாநகர பேருந்துகள் இயக்கப்படும் - மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு
நேற்று (அக்டோபர் 15) சென்னையில் 30 செ.மீ வரை மழை பெய்துள்ளது.
மாநகராட்சி, குடிநீர் வாரியம், தூய்மை பணியாளர்களான தொழிலாளர்களின் கடுமையான பணி பாராட்டுதலுக்கு உரியது.
வங்கக்கடலில் 360 கி.மீ தூரத்தில் உள்ள புயலின் மையப் பகுதி தற்போது 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து நாளை புதுச்சேரி - எண்ணூருக்கும் இடையில் சென்னையில் கரையை கடக்கும்.
மழை தொடர்ந்து நீடிக்கும். ஆனால் . அதிகன மழை இருக்காது. தற்போது இயல்பு நிலைக்கு சென்னை திரும்புகிறது.
பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்களின் விடுமுறை மற்றும் வீட்டிலிருந்தே பணி செய்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கின்ற நிலையிலும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வருவதால் சாலைகளில் குறைந்த அளவே போக்குவரத்து உள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்ரோன் மூலம் உணவு, தண்ணீர் பாட்டில்களை விநியோகம் செய்வதற்கான ஒத்திகை சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா முன்னிலையில் நடத்தப்பட்டது.
42 மீட்டர் உயரத்திற்கும் இரண்டு கிலோமீட்டர் தூரமும் இந்த ட்ரோன்கள் உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லும் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
கனமழை எதிரொலியாக அம்மா உணவகங்கள் மூலம் இலவசமாக உணவுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.