Bhavatharini: ‘மயில் போல பொண்ணு ஒன்னு..’ பவதாரணியின் சிறு வயது புகைப்படங்கள்!

Sun, 28 Jan 2024-3:32 pm,

பின்னணி பாடகி பவதாரிணி, இளையராஜாவின் இரண்டாவது மகளாவார். இவர், புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இவரது வயது, 47 ஆகும். தமிழில் தனது தந்தை இளையராஜாவின் இசையிலும், தம்பி யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் பல பாடல்களை பாடியுள்ளார். 

பவதாரிணி, சில மாதங்களாகவே கடும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இலங்கையில் உள்ள கொலம்புவில் சிகிச்சை பெற்று வந்த இவர், கடந்த 25ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து ரசிகர்களும் திரையுலகமும் சோகத்தில் ஆழ்ந்தது. 

மயில் போல பொண்ணு ஒன்னு, ஆத்தாடி ஆத்தாடி, தாலியே தேவ இல்ல போன்ற பல ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் பவதாரிணி. 

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனக்கு இசை கற்றுக்கொடுத்ததே தனது அக்காதான் என ஒரு மேடையில் கூறியிருந்தார். இவர் மட்டுமன்றி, பவதாரிணி பழகுவதற்கும் பேசுவதற்கும் மிகவும் இனிமையானவர் என்று பலர் கூறியுள்ளனர். 

பவதாரிணி இறந்த அன்று, அவரது தந்தை இளையராஜா ‘அன்பு மகளே’ என்று கூறி அவரது சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். 

பவதாரிணி, தான் சிகிச்சைக்காக இலங்கைக்கு செல்வதற்கு முன்னர் தனது குடும்பத்தினரை சந்தித்து நேரம் செலவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொடுத்து அவர்களை சர்ப்ரைஸ் செய்தாராம். 

பவதாரிணியின் சிறு வயது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link