தலைமை பயிற்சியாளர் ஆனதும் கம்பீர் வைத்துள்ள முதல் கோரிக்கை!

Tue, 16 Jul 2024-8:49 pm,

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கம்பீர் தலைமையில் இந்திய அணி இந்த மாத இறுதியில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது.

டி20 உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்று இருந்த ரோஹித், கோலி, பும்ரா ஆகிய மூத்த வீரர்கள் இந்த தொடரில் விளையாட மாட்டார்கள் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில், இலங்கை சுற்றுப்பயணத்திற்குப் பிறகு அனைத்து வீரர்களுக்கும் நீண்ட இடைவெளி கிடைக்கும் என்பதால் மூத்த வீரர்கள் இந்த தொடரில் விளையாட வேண்டும் கம்பீர் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கை சுற்றுப்பயணத்திற்கு பிறகு வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. செப்டம்பர் மாத இறுதியில் இந்த தொடர் நடைபெறுகிறது.

மேலும், தனிப்பட்ட காரணங்களுக்காக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். அதேசமயம் டி20 தொடரில் பங்கேற்க உள்ளார்.

இந்த வார இறுதிக்குள் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அணி தேர்வுக்கான மீட்டிங் நடைபெற்று வருகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link